பாகுபலி ரேஞ்சில் பார்த்திபன் இயக்க விஜயகாந்த் நடிக்க இருந்த பிரம்மாண்டமான படம்… அப்புறம் என்ன ஆச்சு?

Published on: January 5, 2024
ParthibanVK
---Advertisement---

ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம் விஜயகாந்த் உடனான தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

விஜயகாந்த் பல புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். புதுசா வருபவர்களைப் பற்றி இவன் நல்லா பண்ணுவான்னு கூட இருக்குறவங்க சொல்வாங்க. ஆனா யாருன்னே தெரியாத அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும்ல. கொடுத்தா தான அவன் முன்னுக்கு வருவான்.

இதையும் படிங்க… அயலானுக்கு பேட்டி வேணுமா? அப்போ இந்த கண்டிஷன் கன்பார்ம்.. சிவகார்த்திகேயனின் தில்லாலங்கடி!

இன்று புதியவர்களை ஊக்குவிக்க ஆள் கிடையாது. தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சௌத்ரி சார் 100 படங்களில் 65 பேரை இயக்குனராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். 30 பர்சன்ட் பெயிலியரா இருக்கலாம். ஆனா புதியவர்கள் ஜெயிக்கும்போது அதுல இருக்குற சந்தோஷமே தனி. அதே மாதிரி நடிகர்களில் விஜயகாந்தைச் சொல்லலாம்.

தமிழில் கருப்பண்ணசாமி. ஒருவாட்டி நாங்க பார்த்த இடத்துல பூகம்பம் வந்துட்டுது. அது வடகர்நாடகாவின் எல்லை. அது பெரிய பட்ஜெட். கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. பாகுபலி படத்துக்கு சரிசமமாக உருவாக இருந்த படம். பெரிய பெரிய செட் போட்டு எடுத்தாங்களாம். அதுல 5 பாடல்கள். இளையராஜா போட்டு அசத்தியிருப்பார். சூட்டிங் போறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் நின்று போனது.

இதையும் படிங்க… புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

புதிய பாதை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் பார்த்திபனை வைத்து தாலாட்டுப் பாட வா படத்தைத் தயாரித்தார். ஆர்.சுந்தரராஜன் இயக்கிய இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. அதே போல பார்த்திபனின் முதல் படமான புதிய பாதையைத் துவக்கி வைத்தவரும் விஜயகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.