காதலியை ஆட்டையை போட பார்த்த சரத்குமார்!.. நாட்டாமையை கடுப்பேத்த அஜித் செஞ்ச காரியம்…

Published on: February 15, 2024
---Advertisement---

Ajithkumar: தனிமையை மட்டுமே விரும்பும் இப்போதைய அஜித்துக்கு சற்று நேரெதிரானது அவரின் ஆரம்பகாலம். அந்த கட்டத்தில் அவரை பார்த்தவர்களுக்கு ‘இவரா இப்படி?’ என்ற சந்தேகமே வரும் அளவுக்கு சேட்டை செய்தவர் தான் அஜித். அவர் தன்னுடைய சக நடிகரான சரத்குமாரை வெறுப்பேற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் வெளியாகி இருக்கிறது.

அஜித் சினிமாவில் உயர்ந்து கொண்டு இருந்த போது அதே வேகத்தில் சினிமாவில் வளர்ந்தவர் நடிகை ஹீரா. இதயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தவருக்கு தொடர் வாய்ப்புகள் குவிந்தது. நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த நிலையில் சரத்குமாருக்கு ஹீரா மீது காதல் கசிந்தது. ஆனால் இது ஹீராவுக்கு பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..

அந்த நேரத்தில் தான் தொடரும் படத்தில் அஜித்துடன் ஹீரா இணைந்து நடித்தார். இருவருக்கும் அதில் காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் அவருக்காக அதிகம் உருகியது அஜித் தானாம். கிட்டத்தட்ட தொடர் லவ் லெட்டரை எழுதிக்கொடுத்து கொண்டே இருப்பாராம். இப்படியே இருவரும் லவ்வில் கசிந்துருகினர்.

இந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்பும் விஷயத்தினை கேள்விப்பட்ட அஜித்துக்கு ஒரு ஐடியா தோன்றியதாம். முட்டுக்காட்டில் சரத்குமாரின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது. ஹீராவை காரின் முன்சீட்டில் அமர வைத்து நேராக கூட்டிப் போய்விட்டார். அங்கே போனதும் சரத்குமாருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக லைட்டை போட்டு இருவரும் கொஞ்சி கொண்டனராம். இதில் கடுப்பான சரத்குமார் அப்போதே பேக்கப் என கத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இதையும் படிங்க: உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்

இப்படி கசிந்துருகியும் ஹீரா வீட்டினருக்கும், அஜித் வீட்டினருக்கும் மனகசப்பு ஏற்பட்டதால் இவர்கள் காதல் கைக்கூடவில்லை. அதன் பின்னரே ஷாலினியுடன் காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இன்னமும் ஹீரா சிங்கிளாக தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.