அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படம்.. சத்தமே இல்லாமல் சாதனை செய்த சிம்பு

Published on: February 27, 2024
simbu
---Advertisement---

Actor Simbu: குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே சினிமாதான் எல்லாமே என கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு.தற்போது கமல் தயாரிப்பில் ஒரு வரலாற்று பின்னனியில் உருவாகும் திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

சிம்புவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக இந்த படம் அமையும் என சொல்லப்படுகிறது. அதற்காக பல நாளாக வித்தியாசமான கெட்டப்பிலேயே இருந்து வருகிறார். சிம்புவை எப்போதும் ஒரு காதல் மன்னனாக சார்மிங் ஹீரோவாகவே பார்த்து பழகிவிட்டோம்.

இதையும் படிங்க: வளர்ந்து கொண்டே இருக்கும் பாக்கியா!… மொத்தமாக ராதிகாவிடம் கையும், களவுமாக சிக்கிய கோபி!…

மாநாடு படத்திற்கு பிறகு ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார் சிம்பு. மாநாடு படத்திற்கு முன் சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற திரைப்படமாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இருந்தது. ஒரு முழு நீள காதல் கதையை அடிப்படையாக கொண்டு வெளியான அந்த படம் இளசுகளின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருக்கிறதா என படத்தின் இயக்குனர் கௌதம் மேனனிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே வந்தனர். அதனால் அந்தப் படத்தை ரி ரிலீஸ் செய்தார்கள். சமீபகாலமாக சூப்பர் ஹிட்டடித்த படங்களை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து தியேட்டர் உரிமையாளர்கள் லாபம் பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சேரன் பாண்டியன் படத்துல நடந்தது இதுதான்!. சுவாரஸ்ய தகவல்களை சொல்லும் ஒளிப்பதிவாளர்..

இந்த வரிசையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய ரீ ரிலீஸ் செய்து ஓடிய திரைப்படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்தான் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாக அமைந்திருக்கிறதாம். இன்னும் pvr சினிமாஸில் கிட்டத்தட்ட 750 நாள்களையும் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.