கடைசி முயற்சியில் விடாமுயற்சி! இது மட்டும் வொர்க் அவுட் ஆகலனா படம் அரோகராதான்..

Published on: June 9, 2024
ajith
---Advertisement---

Vidamuyarchi: நேற்றிலிருந்து விடாமுயற்சி திரைப்படம் கங்குவா திரைப்படமும் தீபாவளிக்கு ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக போகின்றன என்ற ஒரு செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு அஜித் சூர்யா இவர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகப்போகின்றன என்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விடாமுயற்சி படம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அஜித் இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டு வார காலம் பிரேக் எடுப்பதற்காக சென்னை வந்துள்ளார் என்ற செய்தியை தனஞ்செயன் கூறியதோடு.

இதையும் படிங்க: சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?

இந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற ஒரு தகவலையும் பகிர்ந்திருக்கிறார். இதற்கிடையில் விடாமுயற்சி குறித்து மகிழ்திருமேனி இடம் கேட்டபோது ‘ நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். அஜித் தரப்பிலும் எந்த ஒரு மறுப்பும் இல்லை. அவரும் ரெடியா தான் இருக்கிறார். ப்ரொடக்ஷன் தரப்பிலிருந்து தான் சரியான பதிலை சொல்ல வேண்டும்’ என மகிழ் திருமேனி சொன்னதாக தனஞ்ஜெயன் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அஜித்தும் குட் பேட் அக்லி படக்குழுவிடம் ஒரு வேளை விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு 24ஆம் தேதி ஆரம்பிக்கப்படவில்லை என்றால் நாம் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆரம்பித்து விடலாம் என்று கூறியிருக்கிறாராம்.

இதையும் படிங்க: எஸ்டிஆருக்கு பத்து தல!.. கூல் சுரேஷுக்கு சொட்டை தல!.. இர்பான் அந்த தலையில என்ன பண்றாரு பாருங்க!..

அதனால் விடா முயற்சிபடத்தின் கடைசி ஷெட்யூல் இதுவாகத்தான் இருக்கும். 24 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பித்தால் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் இந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும். கொஞ்சம் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக தீபாவளி அன்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகாது என தனஞ்செயன் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.