Connect with us
bedroom

Cinema News

நாள் முழுக்க படுக்கை சீன்… சிக்கிய 5 முன்னணி நடிகர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Malluwood: சமீபகாலமாகவே மலையாள சினிமாக்கள் உச்சத்தில் இருந்த நிலையில் அது திருஷ்டி பட்டது போல தற்போது மொத்த திரையுலகமே சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதில் ஐந்து முன்னணி நடிகர்களும் இருப்பது தான் ரசிகர்களின் தற்போதைய கவலையாக மாறி இருக்கிறது.

தமிழை தாண்டி மற்ற மொழிகளில் முக்கிய நடிகர்களின் ஆதிக்கம் அதிகம். அது போல தான் மலையாளத்திலும் சில நடிகர்கள் மட்டுமே அத்திரையுலகத்தை ஆட்சி செய்து வருகின்றனர். அப்படி ஒரு முறை முக்கிய நடிகை ஒருவருக்கு காரில் பாலியல் அச்சுறுத்தல் நடந்தது.

இதையும் படிங்க: சிவாஜி, கமல், ரஜினி கூட நடிச்சு கிடைக்காத மரியாதை… விஜய் கூட நடிச்சு கிடைச்சது! யாருப்பா அது?

அது மொத்த சினிமா ரசிகர்களையுமே பாதித்தது. இதைத் தொடர்ந்து நடிகைகள் அனைவரும் தங்களுக்கு மலையாள சினிமாவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஒரு அமைப்பை தொடங்கினர். பின்னர் அது அமைப்பாக மட்டுமே சென்று விடக்கூடாது என்பதற்காக நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழு கூடியது.

பல வருடத்திற்கு முன்னர் இக்குழு அறிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில், அது கேரளா அரசால் வெளியிடப்படாமல் இருந்தது. நடிகை பார்வதி ஏன் இதை இத்தனை நாள் வெளியிடாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்ப சமீபத்தில் அக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தான் தற்போது சர்ச்சை தொடங்கி இருக்கிறது.

Malayalam cinema

மலையாளத்தின் முக்கிய நடிகைகள் அனைவரும் இக்குழுவின் விசாரணையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி முதலில் 15 முக்கிய பிரமுகர்கள் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் முதல் ஐந்து இடத்தில் இருப்பது மலையாளத்தின் டாப் 5 நடிகர்கள் என்பதுதான் உச்சபட்ச அதிர்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க: விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….

இது குறித்து திரைவிமர்சகர் செய்யாறு பாலு கூறும் போது, மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா மொழி சினிமாக்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. சமீபத்தில் ஒரு நடிகை இடம் பேசும் போது, படுக்கையறை காட்சி படமாக்கப்பட்டது, ஆனால் அதில் அந்த நடிகர் தான் தப்பு செய்தார். என்னிடம் தொடர்ந்து அத்து மீறினார்.

ஆனால் அந்த காட்சி சரியில்லை எனக்கூறி இயக்குனர் என்னைத்தான் திட்டினார். நான் இதனால் மணமுடைந்த போது தான் அது நடிகர் மற்றும் இயக்குனரின் கூட்டுக் களவாணித்தனம் என தெரிந்தது. இது மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் துணை நடிகைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனார்.

அவர்கள் இயற்கை உபாதைகள் கூட நிம்மதியாக செல்ல முடியாத நிலைதான் அங்கு இருக்கிறதாம்.. ஒரு முறை நடிகை ஒருவர் அவசரமாக ரெஸ்ட் ரூம் பயன்படுத்திக் கொள்ளலாமா? என நடிகரின் கேரவனில் சென்று கேட்க அவர் உடனே வெளியில் போ என கட்டியிருக்கிறார். இதனால் அங்கு நடிகைகளுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாக குறிப்பிட்டிருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top