இயக்குனர் கௌதம் மேனனிடம் சினிமா கற்றவர் மகிழ் திருமேனி. சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார் மகிழ் திருமேனி.
அதில் அருண் விஜயை வைத்து அவர் இயக்கிய தடையறத் தாக்க திரைப்படம் பேசப்பட்டது. நல்ல சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர் படத்தை எடுப்பவர் என்கிற பெயர் மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
தொடர்ந்து மிகாமன், தடம் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார் மகிழ் திருமேனி. உதயநிதியை வைத்தும் ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒருபக்கம், விஜய்க்கு அவர் மூன்று கதைகளை சொல்லி விஜய்க்கு மூன்றுமே பிடித்து போனது. ஆனால் அந்த நேரத்தில் உதயநிதி படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியிருந்ததால் மகிழ் அங்கு போய்விட்டதால் விஜயை இயக்கம் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் அஜித் அவரை அழைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

அந்த படத்தின் ஷூட்டிங்பின் போது விஜய்க்கு சொன்ன 3 கதைகளை அஜித்திடம் சொல்ல அந்த கதைகள் அஜித்துக்கு மிகவும் பிடித்த போய் விட்டது. அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனருடன் இணைந்து அந்த படம் ஹிட் அடித்துவிட்டால் அந்த இயக்குனரின் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடிப்பார். அப்படித்தான் சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கத்தில் நடித்தார்..
ஆனால் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அஜித் மகிழ் திருமேனியை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். படத்தின் தோல்விதான் காரணமா இல்லை வேறு எதாவது காரணமா என்பது தெரியவில்லை. அஜித்திடமிருந்து அழைப்பு வராததால் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கம் முயற்சியில் மகிழ் திருமேனி ஈடுபட்டிருக்கிறாராம்.
