---Advertisement---

பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்விய பராசக்தி.. வா வாத்தியார்!.. இவ்ளோதான் வசூலா?!…

Published on: January 23, 2026
---Advertisement---

பிரபலமான பெரிய நடிகராக இருப்பதாலேயே திரைப்படங்கள் இப்போதெல்லாம் ஓடி விடுவதில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவர வேண்டும்.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி.. படம் பிளாப்தான்.. இதை இப்போதும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வதில்லை. ஆனால் நல்ல கதையோடு சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறுகிறது.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஆதரவோடு உருவான பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியானது.. படம் வெளியான போது இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

ஒருபக்கம் இந்த படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள்.. படம் வெளியாகி 2 நாட்களிலேயே தியேட்டர்கள் காத்து வாங்கியது. தமிழகத்தில் இந்த படம் 51 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள். அதில் சினிமாவில் மொத்தமாக வசூல் என்பதை விட எவ்வளவு பங்கு என்பதைத்தான் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது பராசக்தி படம் 21 கோடி மட்டுமே ஷேர் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படமும் கடந்த 15ம் தேதி வெளியானது. இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியது. இந்த படம் தமிழகத்தில் 9 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதில் 3 கோடி மட்டுமே ஷேர் வந்திருப்பதாக வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.

பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படமும் வெளியாகவில்லை.. வெளியான இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஓடவில்லை.. கடைசியில் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம்தான் வசூலை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.