
தூரல் நின்னுபோச்சு தமிழ் திரையுலகின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று. பாக்யராஜ் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான இப்படம், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அற்புத படைப்பு.
இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் பாக்யராஜ் . ஒரு சாதாரண கிராமத்து கதையை, மிக உணர்ச்சிகரமான மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதையாக மாற்றியது இவரது திரைக்கதை அமைப்புக்கு சான்றாகும்.
படத்தின் தலைப்பான ‘தூரல் நின்னுபோச்சு’ என்பது படத்தின் கதைக்களத்தோடு மிக அழகாகப் பொருந்துகிறது. நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அந்தச் சிக்கல்கள் நீங்கி அவர்கள் இணையும் தருணத்தை அழகாக காட்சிபடுத்தியிருப்பார். பாக்யராஜ் கதாநாயகனாக நடித்தார். நாயகியாக சுலக்சனா நடித்திருந்தார். இவர்களின் இயல்பான நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

படத்தில் சுலக்சனா அப்பாவாக செந்தாமரை நடித்திருப்பார். அவர் நடித்த படங்களிலேயே அற்புதமான வேடம். மனிடஹ்ர் பின்னியிருப்பார். பாக்யராக் ஒரு பேட்டியில் கூறியபோது செந்தாமரை தன்னிடம் எனக்கு தனி அடையாளத்தை இந்த படம் தான் கொடுத்தது என்று கூறினாராம். அந்த அளவிற்கு அவரது வேடம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதே போன்றே எம்.என். நம்பியார் வேடமும். எம்ஜிஆரே நம்பியாரின் வேடத்தை பாரட்டி தள்ளினார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று இன்றும் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன.
பாக்யராஜின் படங்களில் வரும் வசனங்கள் எப்போதும் தனித்துவமானவை. இப்படத்திலும், அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் எதார்த்தமான பேச்சுகளை, மிகச் சுவாரஸ்யமாகவும், சில இடங்களில் நையாண்டியாகவும் வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு, இப்படத்தின் திரைக்கதை ஒரு சிறந்த பாடமாகும். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், நகைச்சுவையும் சென்டிமென்ட்டும் மாறி மாறி வருவது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.

இப்படம் வெளியான காலத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது அமைந்தது. பல விருதுகளையும், பாராட்டுகளையும் இப்படம் குவித்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிற மொழிகளிலும் இது ரீமேக் செய்யப்பட்டது. இருப்பினும், தமிழ் பதிப்பில் இருந்த அந்த எதார்த்தமும், நகைச்சுவையும் பிற மொழிகளில் அந்த அளவிற்கு வரவில்லை என்று ரசிகர்கள் இன்றளவும் கருதுகின்றனர்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
