latest news
சும்மா பேசுறதுக்கு சம்பளம் கொடுத்த அஜித்!.. நடிகர் சொன்ன ஆச்சர்ய தகவல்!…
அஜித்தை வைத்து ரெட் திரைப்படத்தை இயக்கியவர் சிங்கம் புலி. ராம் சத்யா என்கிற பெயரில் அந்த படத்தை இயக்கியிருந்தார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர் சினிமாவில் கதாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என பல வேலைகளை செய்தவர். இயக்குனர் பாலா, சுந்தர்.சி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவர். அவர்களின் பல படங்களில் இவர் வேலை பார்த்துள்ளார். நான் கடவுள் திரைப்படத்தில் கூட பிச்சைக்காரராக நடித்திருந்தார்..
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் கூட இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சிங்கம் புலி அஜித்தை பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். ‘
ரெட் படத்திற்கு மின் திடீரென ஒரு நாள் அஜித் சாரிடமிருந்து அழைப்பு வந்தது.. அப்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது பில்லா 2 படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருந்தது.. நான் 30 நாட்கள் அஜித் சாரோடு தங்கியிருக்க வேண்டும் என சொல்லி சுரேஷ் சந்திரா அழைத்தார்.. நானும் கோவாவுக்கு போனேன்.. அஜித் சாருக்கு அடுத்து எனக்கு ரூம் போட்டு கொடுத்தார்கள்.

அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் முப்பது நாட்களும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. காலை முதல் சாயந்திரம் வரை என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அதன் பின் ஷூட்டிங் போயிட்டு மீண்டும் காலை வருவார்.. மீண்டும் பேசுவோம்.. நிறைய திரைப்படங்களைப் பற்றி பேசுவார்.. ‘ஒரு படம் வந்திருக்கே. அது என்ன கதை?’ எனக்கேட்பார்.. தெலுங்கு படங்கள் பற்றி விசாரிப்பார்.
சில ஹாலிவுட் படங்களை போட்டு காட்டி சண்டை காட்சியை எப்படி எடுத்திருக்கிறாங்க பாரு’ என்பார். 30 நாட்கள் முடிந்தவுடன் எனக்கு ஒரு சம்பளத்தையும் கொடுத்தார். ‘நான் நடிக்கவே இல்லையே.. சும்மா பேசிக் கொண்டிருந்தேன் எனக்கு எதற்கு காசு?’ என்று கேட்டேன்.. நீங்க நிறைய படங்களை விட்டுவிட்டு வந்திருக்க்க.. இது அதுக்கான சம்பளம்’ என்று சொன்னார். ‘அடுத்த படத்துக்கும் என்ன கூப்பிடுங்க’ ன்னு சொன்னேன். ‘என்னா இப்படி ஆரம்பிச்சிட்டே’ என்றார். அவரோடு நேரம் செலவழித்தது பசுமையான நினைவுகள்’ என அவர் பேசியிருக்கிறார்.
