Connect with us

Cinema News

நான் நினைச்சா 10,000 காக்காவை வர வைப்பேன்… அதிர்ச்சி கொடுத்த நகைச்சுவை நடிகர்!..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். நடிப்பை தாண்டி அவர்களுக்கு பாடல் பாடுவது, இசையமைப்பது படம் தயாரிப்பது போன்ற திறமைகள் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் இதெல்லாம் இல்லாம வித்தியாசமான திறமைகள் உள்ள மனிதர்களும் உள்ளனர்.

ஒரு காமெடியில் விவேக் காக்கா பிரியாணி உண்ட பிறகு அங்கு வரும் மனிதர் காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா சத்தம் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என கேட்பார் அல்லவா!. அவர்தான் நடிகர் காக்கா கோபால்.

இவர் வெகு காலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்சமயம் பேட்டியில் பேசிய இவர் வித்தியாசமான தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த விவேக் காமெடியால்தான் இவருக்கு காக்கா கோபால் என்கிற பெயர் வந்தது என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் அதற்கு அவரது திறமையே காரணமாக இருந்துள்ளது. அவர் காகம் போன்ற குரலில் கத்தினால் நிறைய காகங்கள் அங்கு வருமாம். இதுக்குறித்து கூறும் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு காகம் வர வேண்டும் என இயக்குனர்கள் நினைத்தால் என்னை அழைப்பார்கள். நான் காகம் போல கத்தி 10,000 காகங்களை கூட வரவழைப்பேன். அவை ரவுண்டடிக்க வேண்டும் என்றால் அதையும் செய்வேன்.

மேலும் ஆடு, மாடு, எருமை போன்ற மிருகங்களிடம் கூட எனக்கு பேச தெரியும் என ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் காக்கா கோபால்.

இதையும் படிங்க: சிஷ்ய பிள்ளைகளுக்கு மட்டும் பாரதிராஜா சொல்லிக்கொடுத்த வித்தை! என்னன்னு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top