நான் அப்படி செஞ்சிருக்கவே கூடாது! அத்தனை பேர் இருக்கிற இடத்துல விஜயை உதாசீனப்படுத்திய நடிகர்!

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் லியோ படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். சினிமாவையும் தாண்டி விஜய் இப்போது அரசியலிலும் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார்.

தளபதி 68 படத்திற்கு பிறகு ஒரு மூன்றாண்டு இடைவேளை எடுத்து விஜய் அரசியலில் முழுவதுமாக ஈடுபட போகிறார் என்ற செய்தியும் உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரிடமும் எளிதாக ஜெல் ஆகாத விஜய் அரசியலுக்கு செட் ஆவாரா என்ற கருத்தும் ஒரு பக்கம் பரவிக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: மொக்க காரணத்துக்காக சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்!… தட்டி தூக்கிய பார்த்திபன்..!

இந்த நிலையில் விஜயை பற்றி இதுவரை தெரியாத ஒரு தகவலை ஒரு பிரபல நடிகர் ஒரு பேட்டியின் போது பகிர்ந்தார். பெரும்பாலான படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்து வருபவர் நடிகர் பிர்லா போஸ். போலீஸ், சி.ஐ.டி போன்ற அரசு அதிகாரி வேடத்திற்கென்றே பிறந்தவர் போல கச்சிதமாக பொருந்தக் கூடியவர்.

விஜயின் பெரும்பாலான படங்களில் இவர் நடித்திருக்கிறார். விஜய்க்கும் தனக்கும் நல்ல பழக்கம் உள்ளது என்றும் என்னிடம் விஜய் நன்றாக பழகுவார் என்றும் கூறிய பிர்லா போஸ் ஒரு சமயம் விஜய் தன் அருகே அழைத்தும் உதாசினப்படுத்தியிருக்கிறார் பிர்லா போஸ்.

இதையும் படிங்க: வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்.. ஆனாலும் நடிப்பை பார்த்து மிரண்டு போய் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை..

அதாவது விஜயின் கூடவே ஒருவர் இருப்பாராம். அவர் யார் என்பதை பிர்லா போஸ் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த நபர் பிர்லா போஸிடமும் நன்றாக பழகக் கூடியவராம். சிவகாசி பட சமயத்தில் அதன் டைரக்டர் பிர்லா போஸை சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார்.

அப்போது ஓப்பனிங் சாங்கிற்காக சூட்டிங்கில் விஜய் இருந்தாராம். வெளியே அந்த நபர் நின்று கொண்டிருந்தாராம். பிர்லா போஸ் அந்த நபரை பார்த்ததும் தன்னுடைய வணக்கத்தை சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நபரோ ‘வாய்ப்பு வேணும்னா இங்க ஏன் வர? போய் புரடியூசரை பார்க்க வேண்டியதுதானே’ என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: கதையே இல்லாமல் உருட்டும் பாக்கியலட்சுமி டீம்.. மீண்டும் வீட்டுக்கு வரும் கோபி…! மீண்டும் மீண்டுமா?

இதை கேட்டதும் பிர்லா போஸுக்கு ஒரே அதிர்ச்சி. நல்ல பழகியவரே இப்படி சொல்கிறாரே என்று அதிருப்தியில் இருந்தாராம். அதற்குள் உதவியாளர்கள் இயக்குனர் அழைக்கிறார் என உள்ளே பிர்லா போஸை அழைத்துச் சென்றிருக்கின்றனர். விஜயும் அந்த காட்சியை முடித்துவிட்டு வரும் வழியில் பிர்லா போஸ் நிற்பதை பார்த்திருக்கிறார்,

பார்த்ததும் ‘ஏன் இங்க நிக்குற? வா உள்ள வந்து என்கூட உட்காரு’ என சொல்லியிருக்கிறார். ஆனால் விஜயுடன் இருந்த நபர் சொன்ன கோபத்தில் இருந்த பிர்லா போஸ் விஜய் அழைத்தும் போகவில்லையாம். பதிலுக்கும் ஒன்றும் சொல்லவில்லையாம். விஜயை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் அதன் பிறகு தான், தான் செஞ்சது சிறுபிள்ளைத்தனம் என்று தெரியவர அதன் பிறகு விஜயை பார்க்கவே முடியவில்லையாம். ஒரு வேளை இந்தப் பேட்டியை பார்த்தாலாவது விஜய் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் என பிர்லா போஸ் கூறினார்.

 

Related Articles

Next Story