Connect with us

latest news

கதையே இல்லாமல் உருட்டும் பாக்கியலட்சுமி டீம்.. மீண்டும் வீட்டுக்கு வரும் கோபி…! மீண்டும் மீண்டுமா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷ் புகைப்படத்தில் இருக்கும் நிலா பாப்பாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை காண அவரது அப்பா, அம்மா வீட்டுக்கு வருகின்றனர். இங்கை ஏன் வீடு எடுத்து தங்கிருக்க? நம்ம வீட்டுக்கு போகலாம் என அழைக்கின்றனர்.

அமிர்தா மற்றும் நிலாவை அழைச்சிக்கிட்டு தான் வருவேன் என அடம் பிடிக்கின்றனர். புரிஞ்சிக்கோப்பா என அவர்கள் சொல்லும் சமாதானத்தினை கணேஷ் கேட்கவே இல்லை. மேலும் வீட்டை விட்டு போங்க என்கிறார். நாங்களாவது உன் கூட இருக்கோமே எனக் கெஞ்ச சரியென சமாதானம் செய்கிறார்.

இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் அப்படியே பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..

தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி நான் கோபியை அழைச்சிட்டு வர போறேன் எனக் கூறுகிறார். பாக்கியா அப்போ நானும் கிளம்பிடுவேன் என பிடிவாதமாக இருக்கிறார். நீ மட்டும் எழில் கல்யாணத்துக்கு சப்போர்ட் செய்தல, செழியனுக்கும் நீ தானே கல்யாணம் செஞ்சி வச்ச எனக் கேட்கிறார்.

ராமமூர்த்தி அவங்க ரெண்டுபேரும் மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் செய்ய பிடிவாதமா இருந்து பண்ணிக்கிட்டாங்க. அவ சப்போர்ட் செஞ்சா. உன் பையன மாதிரி பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சாங்களா என பதிலடி கொடுக்கிறார். என்ன வேணா இருக்கட்டும். இப்போ அம்மாவா அவன் கூடத்தான் இருப்பேன் என கிளம்பிவிடுகிறார்.

ராதிகா வீட்டில் உங்க அம்மா நான் பாத்துக்கலைனு சொன்னப்ப வாயை மூடிக்கிட்டு நின்னீங்களே. நான் பாத்துக்கிறேனு சொல்ல உங்களுக்கு மனசு வரலையில்லை என சண்டை போடுகிறார். நீங்களே இனி வீட்டு செலவை  பாத்துக்கோங்க. நான் வீட்டிலையே இருக்கேன் என்கிறார்.

இதையும் படிங்க: மீனாவை மொத்தமாக துரோகியாக்கிய ரவி… ஹனிமூனில் எஞ்சாய் செய்யும் ஸ்ருதி..! கடுப்பாக முத்து..

இருவருக்கும் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போதே ஈஸ்வரி வந்து விடுகிறார். உடம்பு சரியில்லாம இருக்கவன் கிட்டையா போய் சண்டை போடுவ என திட்டுகிறார். வீட்டுக்கு வா என அழைக்கிறார். ஆனால் கோபி எப்படி நான் அங்கு வர முடியும். அதெல்லாம் சரியாக இருக்காது என்கிறார்.

இந்த வாதம் நடந்து கொண்டு இருக்கும் போது பாக்கியா வீட்டினர் அதிர்ச்சியாக காத்திருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி வர அவருடன் கோபியும் வருகிறார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க கோபியை அழைத்து கொண்டு உள்ளே வருகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top