Connect with us
kamal

Cinema History

மறுநாள் கல்யாணம்! முதல் நாள் இரவு இந்த நடிகையுடன்! வெளிவந்த கமலின் லீலைகள்

தமிழ் திரையுலகில் ஒரு எப்பேர்ப்பட்ட முக்கியமான நடிகராக கருதப்படுகிறார் கமல் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேசமயம் இவரைப் பற்றிய ஏகப்பட்ட கிசுகிசுக்கள் ஆரம்பத்தில் வெளிவந்து கொண்டு தான் இருந்தன. அதற்கு சாதகமாக இவர் நடித்த காட்சிகளும் அப்படித்தான் இருந்தன.

kamal1

kamal1

இவருடைய வலையில் ஏகப்பட்ட நடிகைகள் கிராஸ் பண்ணியது உண்டு. இவருடைய முதல் மனைவி வாணி கணபதி ஒரு ஹிந்தி நடிகை. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஆரம்பமானது. அதே சமயம் இவரும் ஸ்ரீதேவியும் நடித்த மீண்டும் கோகிலா என்ற திரைப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபா.

ஆனால் தீபாவிற்கு முன்பாக அதே கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெமினிகணேசனின் மகளான நடிகை ரேகாவாம். அந்தப் படத்தில் ரேகா நடித்ததன் மூலம் கமலுக்கும் ரேகாவிற்கும் ஒரு நெருங்கிய நட்பு உருவாகி இருக்கிறது. அதே வேளையில் இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரியும் சினிமாவை தவிர்த்து மற்ற நேரங்களிலும் தொடர்ந்து இருக்கிறது.

kamal2

kamal2

அதாவது மறுநாள் வாணி கணபதிக்கும் கமலுக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் முதல் நாள் இரவு ரேகாவுடன் கமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனக்கு இந்த திருமணம் வேண்டாம். எனக்கு பிடிக்கவே இல்லை என்று கமல் கூறியதாகவும் பாலச்சந்தர் கமலை சத்தம் போட்டதாகவும் அதன் பின்னர் தான் கமல் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு வாணி கணபதியை கரம் பிடித்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அந்தத் திருமண உறவும் சில ஆண்டுகள் பிறகு முறிந்து விட்டது. அதனை அடுத்து தான் மீண்டும் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் தான் போய் முடிந்தது. அதுமட்டுமில்லாமல் கமல் கூட நடிக்கும் சக நடிகைகளிடம் மிகவும் நெருக்கமாகத்தான் பழகுவாராம்.

kamal3

kamal3

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அவர்களின் தோல் மேல் தான் கை போட்டு பேசுவாராம். சிம்ரன், அபிராமி, கௌதமி என இவர்களுடனும் கமலின் லீலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் இதை நீடிக்க விடவில்லை. ஒரு வேளை கமல் எதிர்காலத்தில் நாம் பொதுவாழ்க்கையில் இறங்குவோம் என நினைத்திருந்தால் இதை எல்லாம் செய்திருக்க மாட்டார் என்று இந்த செய்தியை கூறிய பிரபல திரை விமர்சகர் இதயக்கனி விஜயன் கூறினார்.

இதையும் படிங்க : இளையராஜா,வாலி,தேவா மூனு பேரும் உறவினர்களா?! – இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!..

google news
Continue Reading

More in Cinema History

To Top