Connect with us

Cinema News

துபாய்க்கெல்லாம் போனா கல்லால அடிச்சி கொன்றுவாங்க! – வடிவேலுவின் லீலைகளை அவிழ்த்த சிங்கமுத்து..

கோலிவுட்டில் நகைச்சுவை மன்னன் , வைகைப்புயலாக அனைவரையும் சிரிப்பு வெள்ளத்தில் திகைத்தவர் நடிகர் வடிவேலு. சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தின் மூலம் ஒரு புதிய அவதாரத்தை எடுத்து மக்களை ஆச்சரியத்தில் கொண்டு சென்றார். அந்தளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் வடிவேலு.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வடிவேலுவை பற்றி அவரது சக நடிகர்கள் கூறி வரும் புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் நேற்று சிங்கமுத்து திடீரென வடிவேலுவை பற்றிய லீலைகலை புட்டு புட்டு வைத்தார்.

இதையும் படிங்க: அரவிந்த்சாமியை திருமணம் செய்ய மறுத்த அந்த நடிகை – வைரலாகும் புகைப்படம்

கிட்டத்தட்ட 12 வருடங்களாக ஒரு மேனேஜர் போல வடிவேலுவுடன் பயணம் செய்தவர் சிங்கமுத்து. ஒரு நிலத்தகராறில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. சிங்கமுத்து கூறுகையில் வடிவேலுவை பற்றி என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. கூட இருந்தவன் எனக்கு தான் அதிகமாக தெரியும்.

அவரை பற்றி கால்வாசி கூட நான் சொல்லவில்லை. எல்லாவற்றையும் சொன்னால் இந்த உலகம் தாங்காது.. என்னெல்லாம் தப்பு பண்ணியிருக்காரு தெரியுமா? அதுமட்டுமில்லாமல் அந்த மனுஷன் துபாய் பக்கமெல்லாம் போனால் கல் எடுத்து அடிச்சே கொன்றுவாங்க.. அந்தளவுக்கு தவறு செய்திருக்கிறார்’ என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ‘அங்காடித்தெரு’ படத்தில் ஒரு காமக் கொடூரக் கதாபாத்திரம்! உண்மையிலேயே மனுஷன் அப்படித்தான் போல

மேலும் ஒரு 10 தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து அந்த ஹீரோ கையை பிடிச்சு இழுத்தான், இந்த ஹீரோ அவளை அப்படி செஞ்சான் என்று மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பாராம். மேலும் இன்னிக்கு யாரை மாட்டி விடலாம் என்று நினைத்தே யார் மீதாவது வேண்டுமென்றே பலியை போடுவாராம் வடிவேலு. இதெல்லாம் சிங்கமுத்துவிடம் சொல்லியே செய்வாராம். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது என்றும் அதையெல்லாம் சொன்னால் அது வேறு மாதிரி போகும் என்றும் கூறினார் சிங்கமுத்து.

இதையும் படிங்க: வளரவளர வெட்டி விட்ட கதையா இருக்கே!.. வைரமுத்துவால் வாழ்க்கையை தொலைத்த கங்கை அமரன்

google news
Continue Reading

More in Cinema News

To Top