Connect with us
actor saravanan

Cinema News

வாய்ப்பு கொடுத்தவரையே வாரிவிட்ட சரவணன்!… சித்தப்பு இது ரொம்ப தப்பு….

Actor saravanan: தமிழ் சினிமாவில் வைதேகி வந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சரவணன். இவர் மேலும் பொண்டாட்டி ராஜ்ஜியம், தாய் மனசு, பிஞ்சு மனசு போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பலவேறு குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதன் மூலம் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என எண்ணினார். ஆனால் இவரது வாய்தான் இவருக்கு பிரச்சினையும்கூட. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் வாசிங்க:டப்பிங்கிற்கு வர மறுத்த பிரியாமணி… காண்டான அமீர்.. அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க!

இதனால் போட்டியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். பின் கடைகுட்டி சிங்கம், கோலமாவு கோகிலா, ஜெய்லர் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினை வெளிக்காட்டினார். இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு பருத்திவீரன் திரைப்படம் நல்ல ஒரு புகழை சம்பாதித்து கொடுத்தது. இப்படத்தில் இவர் நடித்த சித்தப்பு கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இப்படத்தின் இயக்குனரான அமீர் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியைதான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால் பசுபதி தரப்பில் எந்தவொரு பதிலும் இல்லையாம்.

இதையும் வாசிங்க:கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…

அந்த நேரத்தில்தான் அமீரிடம் சரவணன் வந்து வாய்ப்பு கேட்டிள்ளார். அமீரும் சம்மதித்தாராம். ஆனால் படத்தில் முதலில் பொன்வண்ணனின் காட்சிகள்தான் எடுத்தார்களாம். அப்போது இவர் எனக்கான காட்சிகளை எடுக்குமாறு அடிக்கடி கூறுவாராம். அமீரும் உங்களுக்கான சீனை சரியான நேரத்தில் எடுத்து கொடுப்பேன் என கூறுவாராம். அந்த அளவு சரவணன் அப்படத்தில் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்.

அப்பட வெற்றிக்குபின் சரவணன் மட்டுமே தன்னை பார்க்க வந்தார் என அமீர் தெரிவித்திருந்தார். அப்போது சரவணனிடம் இதே போல் கதாபாத்திரத்திலேயே நடித்தால் நீங்கள் சினிமாவில் உயரத்துக்கு செல்லலாம் என அறிவுரை கூறியுள்ளார் அமீர். ஆனால் அதை கேட்காத சரவணன் வீரமும் ஈரமும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அப்படம் அவருக்கு தோல்வியயே சம்பாதித்து கொடுத்தது. ஆனால் இப்படி தன்னை வளர்த்துவிட்ட இயக்குனரை கூட சரவணன் நினைக்காமல் பின்னாளில் பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததால் தனக்கு எந்த பயனும் இல்லை என கூறியிருந்தார். அவர் அப்படி கூறியதை எண்ணி அமீரும் வருத்தபட்டாராம்.

இதையும் வாசிங்க:ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

google news
Continue Reading

More in Cinema News

To Top