நடிகரின் காதலுக்கு எமனாக வந்த மைக் மோகன்! காதலி பிரிந்து போன சோகத்தில் புலம்பும் நடிகர்

Mike Mohan: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒட்டுமொத்த பெண்களையும் தன் படங்களின் மூலமாக கவர்ந்தவர் நடிகர் மோகன். இவர் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு பாடகர் என்றே மக்கள் நினைத்தார்கள். ஏனெனில் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மைக்கை பிடித்தே பாடுவதை போன்ற கதாபாத்திரங்களில்தான் நடித்திருப்பார்.

மோகன் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றவை. அதற்கு இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் ஒரு காரணம். கமல் , ரஜினி , ராமராஜனையும் தவிற மோகனுக்கும் இளையராஜா பல அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடல்களும் கேட்க கேட்க காதுக்கு இனிமையை தரும்.

இதையும் படிங்க: அஜித் சொன்னதை கேக்கல.. இரத்தம் வர அளவுக்கு ரசிகர்கள் செஞ்ச வேலை! இயக்குனர் பகிர்ந்த சோகமான பதிவு

இந்த நிலையில் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு மோகன் ஹீரோவாக நடிக்கும் ஹரா படம் திரைக்கு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் சிங்கம் புலி வந்து பல சுவாரஸ்யமான சம்பவங்களை கூறினார். சிங்கம் புலி அவருடைய வாழ்வில் மூன்று பெண்களை காதலித்திருக்கிறாராம்.

ஒவ்வொரு காதலியின் காதலுக்கும் தூதுவாக மோகனின் பாடல்கள்தான் காரணமாக இருந்தது என சிங்கம் புலி கூறினார். கூட்டத்திலே கோயில் புறா என்ற பாடலை பாடித்தான் ஒரு காதலியை பிடித்தாராம். ஆனால் இவருடைய வீட்டில் கலர் டிவி இல்லை என்று ஒரு காதலி விட்டு போய்விட்டாராம். இன்னொரு காதலி இவர் உயரமாக இல்லை என்று போய்விட்டாராம்.

இதையும் படிங்க: மனோஜ் போட்ட பிச்சைக்காரர் வேஷம்… மீனாவிடம் வசமாக சிக்கிட்டாரே!… விஜயா என்ன செய்வாங்களோ?

மூன்றாவது காதலியுடன் படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்துப் போனாராம் சிங்கம் புலி. அங்கு ‘விதி’ படம் ஓடியிருக்கிறது. அதில் மோகனுக்கு அப்பாவா டைகர் தயானிதி கதாபாத்திரத்தில் ஜெய்சங்கர் நடித்திருப்பார். நடிகை பூர்ணிமாவை காதலித்து கர்ப்பமாக்கி பின் திருமணம் செய்யமாட்டேன் என அது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நடைபெறும்.

puli

puli

அப்பாவின் பேச்சைக் கேட்டு மோகனும் மிகவும் திமிருத்தனமாக இருப்பார். இந்தப் படத்தை பார்த்த பிறகுதான் நமக்கும் பின்னாளில் இந்த நிலைமை வந்து விடும் என சிங்கம் புலியின் காதலி ஓடிவிட்டாராம். அப்ப போனவர்தான் இன்றுவரை அவரை பார்க்கவில்லை என சிங்கம் புலி கூறினார்.

இதையும் படிங்க: ஐயோ இத பாக்க ரெண்டு கண்ணும் பத்தாது!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் அஞ்சலி!.

 

Related Articles

Next Story