Connect with us
lingu

Cinema News

அஜித் சொன்னதை கேக்கல.. இரத்தம் வர அளவுக்கு ரசிகர்கள் செஞ்ச வேலை! இயக்குனர் பகிர்ந்த சோகமான பதிவு

Actor Ajith: தமிழ் சினிமாவில் இன்று தனக்கென ஒரு பெரிய ரசிகர் படைபலத்துடன் உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். திரைப்பிரபலங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். ஏனெனில் மற்ற நடிகர்களை போல் ரசிகர்களை இவர் சந்திப்பதும் இல்லை. வந்து உரையாடுவதும் இல்லை.

ஏன் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களுக்காக ஒரு பதிவு போடுகிறாரா என்றால் அதுவும் இல்லை. இப்படி இருக்கும் ஒரு மனிதருக்கு எப்படி இந்தளவு கூட்டம் என்றுதான் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி அஜித்தை பற்றியும் அவர் நடித்த ஜீ படம் பற்றியும் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஐயோ இத பாக்க ரெண்டு கண்ணும் பத்தாது!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் அஞ்சலி!.

லிங்குசாமியை பற்றி சமீபகாலமாக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதுவும் அஞ்சான் பட தோல்விக்கு பிறகு லிங்குசாமி சொல்லிக் கொள்ளும் படி ஒரு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஜீ படமும் ஒரு பெரிய தோல்வியை கொடுத்த படம். முதலில் அந்தப் படத்தில் நடிக்க அஜித்துக்கே விருப்பம் இல்லையாம். ஏன் அந்த நேரத்தில் அஜித்துக்கு படம் நடிப்பதிலேயே ஆர்வம் இல்லாமல்தான் இருந்திருக்கிறாராம். ஏனெனில் ரேஸ் மீதுதான் அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார்.

மேலும் அந்தப் படம் நடிக்கும் போது அஜித் தனக்கு நேரம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம். மேலும் லிங்குசாமி அஜித்திடம் ‘உண்மையான தாடி வளர்க்க வேண்டும். ரியல் லொக்கேஷன்லதான் படப்பிடிப்பு எடுப்பேன்’ என்ற கண்டீசனை போட்டிருக்கிறார். அதற்கு அஜித் ரியல் லொக்கேஷன்ல வைத்து என்னை வைத்து படம் எடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: வேணாம்பா!. அஜித் ஃபேன்ஸ் ரொம்ப கலாய்ப்பாங்க!.. விஜய் நடிக்க தயங்கிய அந்த வேடம்!..

இருந்தாலும் லிங்குசாமி கோயம்புத்தூரில் ஒரு சண்டை காட்சியை எடுத்திருக்கிறார். அஜித் சொன்னதை போலவே ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டு அவர் கையில் எல்லாம் கீறி ரத்தம் வரும் அளவுக்கு அன்பை பொழிந்திருக்கிறார்கள். உடனே அஜித் லிங்குசாமியிடம் ‘ நான் சொன்னேன்ல ஜி. ரியல் லொக்கேஷன் முடியாதுனு’ என்று கூறினார். ஆனால் உண்மையிலேயே அஜித்துக்கு ரசிகர் கூட்டம் அதிகம் என லிங்குசாமியும் கூறினார்.

மேலும் ஜீ படத்தின் போது தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லையாம். அதனால் சூட்டிங் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்ததாம். படம் எடுக்கும் போதே இந்தப் படம் ஓடாது என லிங்குசாமிக்கும் தெரிந்துவிட்டதாம். இதை ஒரு பேட்டியில் லிங்குசாமி கூறினார்.

இதையும் படிங்க: இப்போ என்ன இவரு காதல் பண்ணி பாக்கியா நோ சொல்ல போறாங்க அதானே! முடியல…

google news
Continue Reading

More in Cinema News

To Top