Connect with us
sivakarthikeyan

Cinema News

பேராசையால எல்லாம் போச்சி!.. அயலானோட எல்லாம் ஓவர்!. நிம்மதி பெருமூச்சி விட்ட எஸ்.கே!..

Sivakarthikeyan: சினிமாவில் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் சொந்தமாக படங்களை தயாரிக்க நினைப்பதை அகலக்கால் வைப்பது என சொல்வார்கள். பல நடிகர்கள் அந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டார்கள். நடித்தோமோ.. சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டோமா.. என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

சொந்த படம் எடுத்து அதில் வெற்றி பெற்றது சில நடிகர்கள் மட்டுமே. உலக நாயகன் கமல்ஹாசனே சொந்த பணத்தில் படமெடுத்து நஷ்டங்களை சந்தித்திருக்கிறார். ரஜினி சில படங்களை எடுத்தார். இதில், படையப்பா, அருணாச்சலம் என இரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியை கொடுத்தது. பாபா திரைப்படம் நஷ்டத்தை கொடுத்தது.

இதையும் படிங்க: சந்தானத்தோட நடிச்சா நீ காலி!. சிவகார்த்திகேயனை தடுத்து காப்பாற்றிய நண்பர்.. அது மட்டும் நடக்கலனா!…

அதேபோல், விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோரும் சொந்த படத்தை எடுத்து கையை சுட்டுகொண்டவர்கள்தான். இப்போது சூர்யா மட்டுமே சொந்த படம் எடுத்து வருகிறார். இந்த வரிசையில் 7 வருடங்களுக்கு முன்பே சொந்த படம் எடுத்தவர்தான் சிவகார்த்திகேயன். இவரின் நண்பர் மற்றும் ஆர்.டி.ராஜவை பினாமியாக வைத்து தான் நடிக்கும் படங்களை தயாரித்தார். இளம் இயக்குனர்களை வைத்து சில படங்களை எடுத்தார்.

அதில் பல கோடி நஷ்டம். 87 கோடி வரை அவருக்கு கடன் ஏற்பட்டது. எனவே, அவரின் படம் ஒவ்வொரு வெளியாகும்போதும் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கினார்கள். எனவே, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களில் இருந்தும் 20 கோடியை கொடுத்து விடுகிறேன் என வாக்குறுதி கொடுத்தார். சில படங்களில் கொடுத்தார். சில படங்களில் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: தாழ்த்தி பேசியவர்களுக்கு பாட்டு மூலம் பதிலடி கொடுத்த இளையராஜா… எப்படினு தெரியுமா?…

அயலான் படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்ட சம்பளம் கடன் காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்போதும் மீது ரூ.27 கோடி கடன் அவருக்கு இருந்தது. அதை கொடுத்தால்தான் அயலான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என பணம் கொடுத்தவர்கள் கட்டையை போட அதையும் கொடுத்துவிட்டு அயலான் படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு எந்த கடனும் இல்லை. இனிமேல் ஒவ்வொரு படமும் பிரச்சனை இல்லாமல் வெளியாகும். அதோடு, பல வருடமாக அவரை துரத்தி வந்த கடன் பிரச்சனை தீர்ந்து நிம்மதி அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க: கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இவர் வந்தார்! ‘கேப்டன் மில்லரை’ காப்பாற்றிய ஒரு கேரக்டர்

google news
Continue Reading

More in Cinema News

To Top