சிவாஜியுடன் நடிக்கவே மாட்டேன்!.. கறார் காட்டிய நடிகர்!.. அப்படி என்ன காரணம்?!..

Sivaji Sivakumar: நடிப்பின் இமயமலை நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிப்பில் போட்டி போட்டு தோற்றுப் போனவர்கள் ஏராளம். நடிப்பு மட்டுமல்ல படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவாஜியிடம் தோற்றுத்தான் போவார்கள். ஏனெனில் படப்பிடிப்பு ஏழு மணி என்றால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆறு மணிக்கு எல்லாம் ஆஜராகி விடுவார் சிவாஜி.

அதிகாலை படப்பிடிப்பு என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப்புடன் தயாராகி வந்து அமர்ந்து விடுவார். இவரைப் பொறுத்தவரை படத்தின் தயாரிப்பாளர்களே சிவாஜியின் முதலாளி. படம் எடுக்கும் இயக்குனர்களை இவர் எப்போதுமே அவருடைய குருவாகவே தெய்வமாகவே பார்த்திருக்கிறார்.

இதையும் படிங்க: வடக்குப்பட்டி ராமசாமி சந்தானமா இது!.. என்னப்பா இப்படி அழறாரு.. பக்கத்துல தமன்னா, பூஜா என்ன பண்றாங்க?

இந்த நிலையில் சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கவே கூடாது என்ற கொள்கை கொண்ட ஒரு நடிகரைப் பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவக்குமார். ஆரம்ப காலங்களில் சிவாஜியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்தவர் சிவக்குமார்.

இவர்களுக்கு இடையே ஒரு நல்ல அண்ணன் தம்பி போன்ற ஒரு உறவுகள் தான் போய்க் கொண்டிருந்தது. சிவாஜியை சிவக்குமார் எப்போதும் அண்ணே என்று தான் அழைப்பாராம். அதேபோல் சூர்யா, கார்த்தி இவர்களுடைய தங்கை பிருந்தா ஆகிய மூவரும் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது தன்னை பெரியப்பா என்று அழைக்கும் படி சிவாஜி கூறுவாராம்.

இதையும் படிங்க: மகளிர் தினத்தை மஜாவா கொண்டாடிய நயன்தாரா.. F1 கார் ரேஸ் வேற.. சும்மா கலக்குறாரே!..

இப்படி இருந்த சிவக்குமார் ஏன் சிவாஜியுடன் நடிக்கவே கூடாது என்ற கொள்கை கொண்டிருந்தார் என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் அவருடைய யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் சிவக்குமார் நடித்த ஒரே படம் பசும்பொன். அதன் பிறகும் சரி அதற்கு முன்பும் சரி பாரதிராஜா உடன் சிவகுமார் வேறு எந்த படத்திலும் நடிக்கவே இல்லை.

ஆனால் தன் சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு படத்திலாவது பாரதிராஜா உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தவர் சிவக்குமார். அது பசும்பொன் படத்தில் தான் நடந்தது. ஆனாலும் அந்தப் படத்தில் நடிக்கும் போது தான் கொண்ட கொள்கையை தளர்த்தி விட்டு தான் நடித்திருக்கிறார் சிவக்குமார். ஏனெனில் பசும்பொன் படத்தில் சிவாஜியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: படத்த விட என் உயிர்தான் முக்கியம்.. தயாரிப்பாளரை பார்த்து பயந்த நடிகை! அப்படி என்ன செய்தார்

பசும்பொன் படத்திற்கு முன்பு வரை சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுடன் இனி நடிக்கவே கூடாது என்ற விடாப்பிடி கொள்கையில் இருந்தாராம். ஆனால் பாரதிராஜாவுடன் எப்படியாவது ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக அந்த கொள்கையை தளர்த்தி விட்டு பசும்பொன் படத்தில் நடித்தார் என சித்ரா லட்சுமணன் கூறினார். ஏன் அப்படி ஒரு கொள்கையில் இருந்தார் என்பதை பற்றி சித்ரா லட்சுமணன் கூறவில்லை.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it