அமீர் பிரச்சினையில் சூர்யாவின் அமைதிக்கு காரணம்! குடும்பமே சேர்ந்து கமுக்கமா இருந்தது இதுக்குத்தானா?

Actor Surya: கோலிவுட்டில் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றன. விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறார் சூர்யா. தமிழ் மட்டும் அல்லாமல் இப்போது ஹிந்தியிலும் தனது அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர இருக்கிறார்.

ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துவரும் சூர்யா ஹிந்தியில் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது மும்பையில் தன் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவருடைய 44ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:நீ என்ன சொல்றது? நான் என்ன கேட்குறது? விஜய் சேதுபதியின் ஆசைக்கு குறுக்கே நிற்கும் மகன்

கார்த்திக் சுப்பாராஜ் படம் என்றாலே ஒரு கிளாஸ் மாஸ். அதனால் சூர்யா கார்த்திக் சுப்பாராஜ் இணையும் இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் தற்போது அளித்து வரும் பேட்டியில் சூர்யாவை பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது பருத்திவீரன் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்திருக்கும். கோலிவுட்டே அதகளமானது.

இந்த பருத்திவீரன் பிரச்சனையால் இதைப் பற்றி இதுவரை சிவக்குமார் குடும்பத்தில் உள்ளவர் யாருமே வாய் திறக்கவில்லை. சூர்யாவும் எந்த ஒரு மறுப்போ அல்லது அவருடைய கருத்தையோ எதையுமே தெரிவிக்கவில்லை .அவர் அமைதியாக இருந்ததற்கு பின்னணி காரணம் என்ன என்பதை பற்றி இயக்குனர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 300 ரூபாய் சம்பளத்துக்காக உயிரை விட்ட நடிகர்! இவர் மட்டும் இல்லைனா அந்த கவுண்டமணி காமெடி எடுபடுமா?

அதாவது பருத்திவீரன் பிரச்சனையில் சூர்யாவின் மீது பல பேர் கல்லை எறிந்தார்கள். அப்போது சூர்யாவிடம் பாண்டிராஜ் ‘இதைப்பற்றி உங்கள் கருத்து எதையும் தெரிவிக்கலாமே’ என சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சூர்யா ‘அவர்கள்தான் கல் வருகிறார்கள் என்றால் அதுக்கு நம்மளும் பதிலுக்கு கல் எடுத்து அடிக்கணுமா சார்? நம்ம மீது பெரிய மரியாதையே இருக்கு. அதை கெடுத்துக்க கூடாது’ என்று கூறினாராம் சூர்யா. இது இவர் எடுத்த முடிவாக மட்டும் இல்லாமல் குடும்பமே சேர்ந்து எடுத்த முடிவாக கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

Related Articles

Next Story