Connect with us
vishal

Cinema News

போதும்டா சாமி! இனிமே இப்படி நடிக்கவே மாட்டேன் – ஹீரோயின்களை பார்த்து தலை தெறிக்க ஓடிய விஷால்

Actor VishalL: செல்லமே என்ற படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதுவரைக்கும் நடிகர் அர்ஜூனிடம்தான் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அர்ஜூன் சொல்லித்தான் இந்தப் படத்தில் ஹீரோ வாய்ப்பே விஷாலுக்கு கிடைத்தது.

சினிமாவிற்குள் வந்த புதிதில் அதிரி புதிரியான வசனங்களை பேசி ரசிகர்களை உசுப்பேத்தி வந்த விஷால் போக போக சார்ஜ் போன பேட்டரி மாதிரி டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார். இடையிடையே வந்த உடல் பிரச்சினைகளாலும் சரியாக அவரால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதையும் படிங்க: ரஜினி அழைத்தும் கமல் அனுமதியில்லாமல் வர மறுத்த பிரபலம்! தலைவருக்கே தண்ணி காட்டியவர் யார் தெரியுமா?

இந்த நிலையில் சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் விஷால். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஹரியுடனும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஷால் தான் நடித்த ஒரு படத்தை பற்றியும் தெரியாமல் அந்தப் படத்தில் நடித்துவிட்டேன் என்று தன் அனுபவத்தை பற்றியும் கூறியிருக்கிறார். சன் டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் ஆங்கராக இருந்து நடத்தி வந்தார் விஷால். அந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல முறையில் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: லியோ படம் ஏன் ரசிகர்களை ஏமாற்றியது?!. படக்குழு செய்த தவறுகள் என்னென்ன?!.. வாங்க பேசுவோம்!..

அதனால் அதே போல் ஒரு ரியாலிட்டி ஷோவை மீண்டும் நடத்தப் போவதாகவும் அதில் நீங்கள்தான் ஆங்கராக இருக்க வேண்டும் என்றும் சன் டிவியில் இருந்து விஷாலுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் விஷால் டிஆர்பிக்காக ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் நான் ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். ஒரு எபிசோடிலேயே டிஆர்பி பிச்சுக்கிட்டு போகும் என்று சொல்லியிருக்கிறார்.

அதாவது சமந்தா, தமன்னா, வரலட்சுமி, லட்சுமி மேனன், நயன் போன்ற முன்னணி நடிகைகளை 13 கேமிரா பொருத்திய ஒரு லிஃப்டுக்குள் அடைத்துவிடுங்கள். லிஃப்ட் போகும் வழியிலேயே கரண்டையும் கட் செய்துவிட்டு பாருங்கள். அப்போ பாருங்க. டிஆர்பி சும்மா தாறுமாறா போகும் என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: முதல் வாரம் மொக்கை.. இரண்டாவது வாரமே சூப்பர் ஹிட்டான அஜித் படம்..! இயக்குனரின் நிலையோ பரிதாபம்..!

ஆனால் இந்த உரையாடலுக்கு பின்னனியில் அவர் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படம்தான் காரணமாக இருந்திருக்கின்றது. அதாவது அந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்களுடன் விஷால் நடித்திருப்பார். ஐயோ சாமி. மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிடலாம். ஆனால் மொத்தமாக ஹீரோயின்களுடன் என்பது இனி வாய்ப்பே இல்லை.

போதும்டா சாமி என்றாகிவிட்டது. அதெல்லாம் கஷ்டம் என்பதை போல் அந்தப் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார் விஷால்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top