Connect with us

Uncategorized

முதல் வாரம் மொக்கை.. இரண்டாவது வாரமே சூப்பர் ஹிட்டான அஜித் படம்..! இயக்குனரின் நிலையோ பரிதாபம்..!

Ajith: தமிழ் சினிமாவில் தனி ஆளாக போராடி ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கியவர் நடிகர் அஜித்குமார். ஆனால் அவருக்கு கோலிவுட் ஒரு அங்கீகாரத்தினையே கொடுத்து இன்று வேற லெவலுக்கு எடுத்து சென்று இருக்கிறது.

அஜித்தின் திரை வாழ்க்கையை புரட்டி போட்ட படம் தான் வாலி. இரட்டை கதாபாத்திரங்களில் அஜித்தின் நடிப்பு இன்றளவிலும் பேசப்பட்டு வருகிறது. ஜோதிகாவின் அறிமுகம், சிம்ரனின் ஆர்பாட்டம் இல்லாத நடிப்பு, வில்லன் அஜித் என படத்தினை இன்றுமே தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

இதையும் படிங்க: அழுது புலம்பிய மீனாவுக்கு சரியான அட்வைஸ் கொடுத்த அம்மா..! ஸ்ருதி ஆசையை கெடுத்த ரவி..!

ஆனால் இந்த படம் ரிலீஸான முதல் வாரம் பெரிய அளவில் ரீச் ஆகவே இல்லையாம். அதுவும் சோஷியல் மீடியா இல்லாத நிலைமை வேறு. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வராமல் போனது. இதனால் எஸ்.ஜே.சூர்யா துடித்து போய் விட்டாராம். விருட்டென ரூமுக்கு சென்றவர் இரவு முழுவதும் அழுதே ஒரு இரவை போக்கி இருக்கிறார்.

பின்ன ஆறு வருட உழைப்பு கிடைத்த முதல் வாய்ப்பு இப்படியானால் யாருக்கு தான் வலிக்காது. மறுநாள் காலையில் எழுந்து தஞ்சாவூர் சென்று அங்கிருந்து நடந்தே வேளாங்கண்ணி செல்ல திட்டமிட்டு கிளம்பி விடுகிறார். நேர்த்தி கடனை செய்ய வேண்டும் என முடிவெடுத்து கிளம்பினாராம். நேர்த்தி கடனை தொடங்கி விட்டார்.

இதையும் படிங்க: 33 வருஷம் ஆச்சு… என் குருவுடன் மீண்டும்.. தலைவர்170 படப்பிடிப்பில் சிலர்த்த ரஜினிகாந்த்..!

அவர் படம் ரிலீஸாவதற்கு முன் கொடுத்த பேட்டி டிவியில் வருவதாக கேள்விப்பட்டு அடுத்த ஊருக்கு ஓட்டமும் நடையுமாக செல்கிறார். அங்கு ஓரமாக நின்று அதை காண்கிறார். அப்போது ஒரு சிறுவன் சூர்யாவை கண்டுக்கொண்டு அவரிடம் கையெழுத்து வாங்கினானாம். அப்போது தான் இயக்குனராக ஜெயிச்சிட்டோம் என்றே நம்பியதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

google news
Continue Reading

More in Uncategorized

To Top