Cinema News
அட்ஜெஸ்ட்மென்ட்லாம் வரமுடியாது சொன்னேன்!..அதுக்கு என்ன பண்ணாங்க தெரியுமா?..உரக்க பேசிய பிரபல நடிகை!…
சினிமாவில் காலம் காலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வாய்ப்பு இருப்பதாக புகார் இருக்கிறது. மீ டூ வில் திரைத்துறையில் உள்ள பல பெண்களும் இதை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி மக்களுக்கு மிகவும் பரீட்சையமானவர் நடிகை தாரணி. இவர் அநேக படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். மிடிஸ் க்ளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இதையும் படிங்கள் : வயசானாலும் அந்த வெறி இருக்கு…! கல்யாணம்-னு வந்தா வாயை கிழிச்சிருவேன்…! ஆத்திரத்தின் உச்சியில் நடிகை…!
திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார் நடிகை தாரணி. இவரும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நானும் இது சம்பந்தமான நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறேன் என்றும் என்னிடம் கேட்கும் இயக்குனர்களிடம் தெளிவாக கூறிவிடுவேன். என்னைப் பற்றி யாரோ தப்பா உங்ககிட்ட சொல்லியிருக்கிறார்கள் என்று கூறினார். அதையும் மீறி விரும்பும் இயக்குனர்கள் கோபத்தில் என் முதுகில் லைட்டை தூக்கி வைப்பார்கள். அதன் எரிச்சலால் முதுகே புண்ணாக போயிருக்கிறது. இதை கடக்காமல் சினிமாவில் யாராலும் வரமுடியாது என்று நடிகை தாரணி தெரிவித்தார்.