Connect with us
kerthy

Cinema News

மீண்டும் அந்தமாதிரி படமா? மலையாள நடிகையை கோர்த்து விட்டு எஸ்கேப் ஆன கீர்த்தி சுரேஷ்

Actress Keerthy Suresh: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி சினிமாக்களிலும் நடித்து வருகிறார். ஒரு வலுவான சினிமா பின்புலத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அழகான நடிப்பாலும் எளிதில் அனைவரையும் கவர்ந்தார்.

சவாலான பல கேரக்டர்களை ஏற்று அதை திறம்பட நடித்துக் கொடுத்திருக்கிறார். டூயட் மட்டுமில்லாமல் உமன் செண்ட்ரிக் படங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரின் கெரியரில் சாணிக் காயிதம், மகாநடி போன்ற படங்கள் ஒரு பொக்கிஷமாகவே கருதப்படும்.

இதையும் படிங்க: தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..

இதனால்தான் தேசிய விருது கீர்த்தி சுரேஷை தேடி வந்தது.  மகாநடி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்று ஒரு சாவித்ரியாகவே கண் முன் தோன்றினார். பார்ப்பதற்கும் அச்சு அசலாக சாவித்ரி போலவே காணப்பட்டார். அபார நடிப்பையும் வெளிப்படுத்தி தேசிய விருதை தட்டிச் சென்றார்.

மகாநடி படத்தில் அவரின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றதால் மீண்டும்  மற்றுமொரு பயோபிக்கில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டனர். பழம்பெரும் பாடகி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் பயோபிக்கில் நடிப்பதற்குத்தான் அவரை கேட்டார்கள். இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்குவதாக இருந்தது.

இதையும் படிங்க: வாய் ஓவரா தான்… ஆனா இந்த விஷயத்துல இளையராஜாவ அடிச்சிக்கவே முடியாது…

ஆனால் கீர்த்தி நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதனால் இந்த பயோபிக் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. இப்போது இந்த படத்தை வெப் சீரிஸாக தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். திருமலை, ஆதி, சுள்ளான் போன்ற படங்களை இயக்கிய ரமணாதான் இந்த வெப் சீரிஸை இயக்குகிறாராம்.

எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் பயோபிக்கில் சுப்புலெட்சுமியாக மலையாள நடிகை அன்னபென்தான் நடிக்கிறாராம்.

இதையும் படிங்க: அவன் பொருள எடுத்து அவனையே போடணும்… லியோ வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்ட படக்குழு!

google news
Continue Reading

More in Cinema News

To Top