தாய் பாசத்துல நயன்தாரா செய்யும் அலப்பறை!.. குவியும் புகார்கள்!.. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க!..

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற எல்லா மொழிகளிலும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். திருமணமாகி குழந்தை பிறந்த பின்பும் கூட இன்றும் தன்னுடைய கெத்தை விடாமல் காத்துக் கொண்டு வருகிறார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். தற்போது தன் குழந்தைகளுடன் முழு நேரத்தையும் சந்தோஷமாக செலவழித்துக் கொண்டு வரும் நயன்தாரா வெளிநாடுகளுக்கு தன் குழந்தைகளை அழைத்துச் சென்று அங்கு குடும்பமாக சேர்ந்து தங்களுடைய சந்தோஷமான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அர்ஜூனால் ஸ்தம்பித்து நிற்கும் ‘விடாமுயற்சி’! இருக்குற பிரச்சினை போதாதுனு இது வேறயா?

இந்த நிலையில் அவருடைய தாய் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. சென்னை எக்மோரில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் நயன்தாரா ஓய்வு நேரங்களில் தன் குழந்தைகளுடன் கீழே இறங்கி வந்து விளையாடுவாராம். பெரிய பெரிய அப்பார்ட்மெண்டுகள் என்றால் உள்ளே வரும் வாகனங்கள் வேகமாக வருவதை தவிர்ப்பதற்கு ஸ்பீட் பிரேக் ஆங்காங்கே அமைந்திருக்கும்.

அப்போது ஒரு ஆட்டோ ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்கி வந்து கொண்டிருக்க விளையாடிக் கொண்டிருந்த நயன்தாரா அந்த ஆட்டோக்காரரை நிறுத்தி ‘குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. நீங்க இப்படி வேகமாக வர்றீங்களே’ என சத்தம் போட்டாராம். அது மட்டுமல்லாமல் ஃபுட் டெலிவரி செய்யும் ஒரு ஊழியர் அதே அபார்ட்மெண்டில் இருக்கும் வேறொரு வீட்டுக்கு டெலிவரி செய்ய வர கீழே இருந்து அந்த டெலிவரி பாய் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரருக்கு போன் செய்து கொண்டிருந்தாராம் .

இதையும் படிங்க: இயக்குனர்களை இப்படி தேர்ந்தெடுத்தே ஹிட் படங்களை கொடுத்தேன்!.. சீக்ரெட் ஆப் சக்சஸ் சொல்லும் மோகன்!…

அப்போதும் நயன்தாரா அந்த டெலிவரி பாயிடம் ‘குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. நீங்க இவ்வளவு சத்தமாக பேசுகிறீர்களே’ என்றும் கத்தினாராம். இப்படி தாய்ப்பாசத்தில் ஊறி போய் இருக்கும் நயன்தாராவின் செயலால் கடுப்பான அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் சம்பந்தப்பட்ட அசோசியேஷனில் நயன்தாரா மீது புகார்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார்களாம். இதை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவை கிண்டலும் கேலியுமாக செய்து வருகிறார்கள்.

 

Related Articles

Next Story