Connect with us
myskin

Cinema News

மிஷ்கினை செருப்பால அடிப்பேனு சொன்ன நடிகை! அவர் செஞ்ச வேலை அப்படி – வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாரு போல

Mysskin: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். எதார்த்தமான கதைகளை காட்சிப்படுத்துவதிலும் அந்தக் கதைகளை அமைக்கும் விதத்திலும் மிஷ்கின் ஒரு சிறந்த இயக்குனராக அறியப்படுகிறார்.

2006 ஆம் ஆண்டில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் மிஷ்கின். முதல் படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

இதையும் படிங்க: காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..

அதனை தொடர்ந்து அஞ்சாதே,  நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற த்ரில்லர் கலந்த கதைகளை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பெற்றார்.

அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் இயக்கிய பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய மூன்று படங்கள் பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. தன் கதையின் மீதே வெறித்தனமாக இருக்கக் கூடிய இயக்குனர்தான் மிஷ்கின்.

இதையும் படிங்க: மீண்டும் ஜிம் மாஸ்டருடன் லாஸ்லியா!.. கமெண்ட் பக்கம் முழுக்க காதல் கதை தான் ஓடுது!..

இப்போது சமீபகாலமாக நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.லியோ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில்  நீங்கள் எடுத்த படங்களில் நடித்த நடிகைகளில் உங்களை கவர்ந்த நடிகை யார் என்ற கேள்வி மிஷ்கினிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பாவனாவை முதலில் கூறினார். அதன் பின் பூர்ணாவைக் கூறினார். மூன்றாவதாக நித்யா மேனனை பற்றி கூறும் போது ‘அவ ஒரு பேய், ராட்சசி, என்ன கொடுத்தாலும் பத்தாது, பேரல் பேரலாக கொடுக்கனும்.

இதையும் படிங்க: தலைவர் 171-ல் இதையெல்லாம் செய்ய போறேன்!.. லோகேஷ் சொன்ன செம சர்ப்பரைஸ்!..

அப்படியே நடிச்சிட்டே இருப்பா. இப்ப அவ என்ன திட்றா. கதை எழுதுனியா இல்லையா? செருப்பால அடிச்சிருவேனு சொல்றா’ என நித்யா மேனனை பற்றி ஒரு பேட்டியில் மிஷ்கின் கூறினார். நீண்ட நாள்களாக மிஷ்கினிடம் கதை ரெடி பண்ணுமாறு கேட்டுகொண்டிருக்கிறாராம் நித்யா மேனன். ஆனால் மிஷ்கின் இப்போதுதான் நடிகராகிவிட்டாரே. சைக்கோ படத்தில் நித்யா மேனன் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஆனால் இந்த நடிகைகளை பற்றியெல்லாம் கூறும் போது அவருக்கே உரிய பாணியில் அவ இவனு ஒருமையில்தான் பேசினார் மிஷ்கின். அது அவர் உரிமையில் வேண்டுமென்றால் சொல்லியிருக்கலாம். ஆனால் இந்த பேட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஏதோ முகம் சுழிக்கும் விதமாக இருந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top