Parasakthi: ‘பராசக்தி’ படத்துல நடிக்க நடிகை சொன்ன ஒரு பொய்! இப்படிலாம் சொல்வாங்களா?

Published on: January 20, 2026
para
---Advertisement---

இந்த பொங்கலுக்கு ரிலீஸான படங்களின் ரிசல்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக மாறியுள்ளது. நினைத்தது ஒன்னு.. நடந்தது ஒன்னுனு சொல்வாங்க. அப்படித்தான் இந்த பொங்கல் அமைந்திருக்கிறது. அரசியல் காரணங்களால் கண்டிப்பாக ஜன நாயகன் படத்திற்கு பிரச்சினை வரும் என எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால் படத்தையே ரிலீஸ் செய்ய முடியாத வகையில் பிரச்சினை வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

அந்த பிரச்சினை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க சோலோவா நம்ம சிவகார்த்திகேயன் அண்ணே மாஸ் காட்டப் போறாரு என சிவகார்த்திகேயன் கூட நினைச்சிருப்பாரு. ஆனால் வச்சான் பாரு ஆப்பு என அடுத்தடுத்து பொங்கல் ரேஸில் வந்து இறங்கினார்கள் கார்த்தியும் ஜீவாவும். ஆனால் கார்த்தியின் வா வாத்தியாரே படம் அந்தளவு ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

இன்னொரு பக்கம் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பிச்சுக்கிட்டு போகுதுனுதான் சொல்லணும். பராசக்தி படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 10 நாள்கள் ஆன நிலையில் வசூல் எதிர்பார்த்த அளவு வரவில்லை என்பதுதான் உண்மை. சுதா கொங்கரா இயக்கத்தில் புரட்சிகரமான வசனங்கள் இருந்தாலும் வழக்கமான கதையும் இந்தப் படத்தில் டிராவல் ஆனது.

ஹிந்தி திணிப்பு எதிர்ப்புனு சொல்லிட்டு அந்த போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்களை படத்தில் காட்டவே இல்லை. மாணவர்களில் ஒருவராகத்தான் சிவகார்த்திகேயனையும் அதர்வாவையும் காட்டினார்கள். இந்த நிலையில் படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தவர் பாப்ரி கோஷ். சிவகார்த்திகேயன் ஜெயிலில் இருந்து தப்பி வட மாநிலத்திற்கு செல்ல அங்கு அவருடைய புறநானூற்று படைதான் சிவகார்த்திகேயனுக்கு அடைக்கலம் கொடுப்பார்கள்.

அதில் இருந்த ஒரு நடிகைதான் பாப்ரி கோஷ். இவர் ஏற்கனவே சீரியலில் நடித்திருக்கிறார். இவர் இந்தப் படத்தில் நடித்ததை பற்றி கூறும் போது சீரியலில் நடிக்க கூட நான் யாரிடமும் சான்ஸ் கேட்க மாட்டேன். ஆனால் இதுவே சினிமாவாக இருந்தால் ஓடி ஓடி போய் சான்ஸ் கேட்பேன். சினிமாவில் நடிப்பதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வேன். ஏன் பராசக்தி படத்தில் நடிக்கும் போது கூட சீரியலில் நடித்திருக்கிறேன் என ஆரம்பத்தில் நான் யாரிடமும் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.