More
Categories: Biggboss Tamil 7 Cinema News latest news

கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி

Cool Suresh: பிக்பாஸில் கடைசியாக எவிக்ட் ஆகி வெளியே வந்தவர் கூல் சுரேஷ். கிட்டத்தட்ட 75 நாள்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் பேராதரவை பெற்றவர் கூல் சுரேஷ். ஒரு வேளை 100 நாள்களும் இருந்திருந்தால் முதல் 5 பேரில் நிச்சயமாக கூல் சுரேஷும் இருந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்தளவுக்கு வீட்டிற்குள் நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்து சக போட்டியாளர்களுக்கும் பிடித்த ஒரு மனிதராக இருந்தார். அவர் வெளியே வந்ததும் ஒரு தனியார் யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலானது. அதாவது பிரதீப்பை பற்றி முதலில் கூறியிருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இப்படியெல்லாம் நின்னா தூக்கம் போயிடும்!.. ஜில்லாக்கி ஜிவ்வுன்னு இழுக்கும் யாஷிகா ஆனந்த்..

பிரதீப் இருந்திருந்தால் அவன் தான் டைட்டில் வின்னர் ஆகியிருப்பான். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என கூறி உள்ளே ஒரு மூன்று பேர் தான் உண்மையாக இருக்கிறார்கள் என கூறினார். விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோரை குறிப்பிட்டு இவர்கள் தான் அப்படியே உண்மையாக இருக்கிறார்கள் என கூறினார்.

மேலும் முதல் ஐந்து பேரில் விஷ்ணு, மணி, தினேஷ், விசித்ரா, அர்ச்சனா ஆகியோர் கண்டிப்பாக வருவார்கள் என்றும் கூறினார். டைட்டில் வின்னர் ஒரு வேளை விஷ்ணு அல்லது தினேஷ் அல்லது மணி யாராவது வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இயக்குனர் பாலாவை தப்பாக புரிந்து கொண்டு திட்டிய நடிகை… கடைசியில் காலில் விழுந்து கதறிய அதிர்ச்சி சம்பவம்!

ஆனால் யாரும் எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்பது போலத்தான் நடக்கப் போகிறது என நாம் யாரை டைட்டில் வின்னர் என்று நினைக்கிறோமோ அவர்கள் வரமாட்டார்கள் என்றும் கூல் சுரேஷ் கூறினார். இதில் அந்த புல்லி கேங்கை பற்றி அவர் பேசவே இல்லை.

ஆனால் அவர் சொல்வதை போல் சரவண விக்ரமை கைத்தூக்கிடுவாரோ கமல்? விஜய் டிவி ப்ராடக்ட் வேற. கண்டிப்பாக அது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் தங்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்னோட லவ் ஸ்டோரி பத்தி தெரியனும்னா அந்தப் படத்தை பாருங்க! தன் காதலியை பற்றி மனம் திறந்த எஸ் ஜே சூர்யா

Published by
Rohini

Recent Posts