அஜித்துக்கு இந்த விஷயத்துல கோபம் அதிகமா வரும்! மாட்டிக்கிட்டு முழித்த டெக்னீசியன்கள்

Actor Ajith: அஜித்தை பொறுத்தவரைக்கும் அவர் எப்படிப்பட்ட மன நிலையான நபர்? எந்த மாதிரி குணம் படைத்தவர் என யாராலும் யூகிக்க முடியாது. ஆனால் கூட பழகியவர்களால் மட்டுமே அதை சொல்ல முடியும். பெரும்பாலும் வெளி இடங்களில் அஜித்தை பார்க்க முடியவில்லை என்பதால்தான் இதுவரை அவரை பற்றி யாராலும் கணிக்க முடியவில்லை.

அந்தளவுக்கு தனக்குத்தானே சில வரைமுறைகளை வகுத்து வாழ்ந்து வருகிறார் அஜித். ரசிகர்களை சந்திக்க மாட்டேன், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன், தனக்கென எந்தவொரு ரசிகர் மன்றமும் வேண்டாம் என்ற ஒரு முடிவான கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் அஜித். இன்று தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிகர்களில் அஜித் டாப் இடத்தில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: கோபிக்கே ஷாக் கொடுக்கிறீங்களே பாக்கியா.. செழியன் பிரச்னை ஓவருங்க…

அவரின் படங்களுக்கு இதுவரை நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது. அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் நல்ல ஒரு வசூலை வாரி இறைத்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடமாக அஜித்தின் படங்கள் வெளியாக வில்லை. அவரின் விடாமுயற்சி திரைப்படம் சில பல காரணங்களால் தாமதமாகிக் கொண்டே இருக்கின்றன.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் அஜித். இந்த நிலையில் அஜித்தை பற்றி சில ஸ்டண்ட் கலைஞர்கள் ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்கள். அதாவது ஏகப்பட்ட நடிகர்களுடன் பணிபுரிந்திருக்கும் இவர்கள் அஜித் படப்பிடிப்பில் மட்டும்தான் ஒரு பாதுகாப்பை உணர்வார்களாம்.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனோட சுத்துறதா பேச்சு!.. அத மாத்தத்தான் அந்த வேலையை பண்ணாரா லோகேஷ் கனகராஜ்?..

அதற்கு காரணம் அஜித்தான் என்று அந்த கலைஞர்கள் கூறுகிறார்கள். இந்த ஸ்டண்ட் கலைஞர்களை சாப்பிட சொல்லி வற்புறுத்துவாராம் அஜித். அவர்கள் சாப்பிட்டால்தான் அஜித்துக்கு நிம்மதியே வருமாம். அப்படி சாப்பிட தாமதமானால் அஜித்துக்கு பயங்கரமாக கோபம் வருமாம். படத்தில் வில்லனை எப்படி மிரட்டுவாரோ அதே மாதிரி இவர்களை மிரட்டி சாப்பிட வைப்பாராம் .

 

Related Articles

Next Story