இந்த தடவ அஜித் வந்தே ஆகணும்!.. வலைவிரிக்கும் திரையுலகம்!. சிக்குவாரா ஏ.கே!..

Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களிலும் சாக்லெட் பாயாக நடித்து, பில்லா திரைப்படம் மூலம் ஸ்டைலீஷ் ஹீரோவாக மாறி, மங்காத்தா படம் மூலம் மாஸ் ஹீரோவாக மாறி முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாறியிருப்பவர் அஜித். விஜய் ரேஞ்சுக்கு இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைசானில் நடந்து வருகிறது. அஜித் பல வருடங்களாகவே ஒரு பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். செய்தியாளர்களை சந்திப்பதில்லை.. யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை.. சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வளவு ஏன்?. அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிக்கும் வரமாட்டார்.

இதையும் படிங்க: உங்களுக்கு ஒரு நியாயம்.. விக்னேஷ் சிவனுக்கு ஒரு நியாயமா.. அஜித் செஞ்சதை அவருக்கே செய்ய பார்த்த தயாரிப்பாளர்?!

வீட்டிலிருந்து நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போவார். ஷூட்டிங் முடிந்தால் வீட்டிற்கு வருவார். அதிக நாட்கள் இடைவெளி கிடைத்தால் பைக்கை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்பிவிடுவார். அதுவும் இல்லையெனில் ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வது என எதையாவது செய்ய போய்விடுவார். இதுதான் அவரின் உலகம்.

சினிமா உலகில் அவருக்கு பல கசப்பான சம்பவங்களும், அவமானங்களும் நடந்துள்ளது. அதனால்தான் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதில்லை என சொல்லப்படுகிறது. கலைஞர் கருணாநிதி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஜித் ‘நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள்’ என ஓப்பனாக பேசி அதிர வைத்தார்.

இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!…

இந்நிலையில், தமிழ் திரையுலகம் சார்பில் அடுத்த மாதம் 24ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரஜினி, கமல் என பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதில், விஜய் உட்பட எல்லா நடிகர்களையும் வரவைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கருதி அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நேற்று ரஜினியை சந்தித்து இது தொடர்பான அழைப்பிதழை கொடுத்தனர்.

எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் அஜித்தையும் இதில் கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அஜித்தும், விஜயும் ஒரே மேடையில் கலந்துகொள்வார்களா? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதேநேரம், ஷூட்டிங் வெளிநாட்டில் நடப்பதை காரணம் காட்டி அஜித் எஸ்கேப் ஆகிவிடுவார் என்றும் விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்..

இதையும் படிங்க: விஜய் , அஜித்தை இனிமே அப்படி பாக்கவே முடியாது! தற்கொலைக்குச் சமம் – பகீர் கிளப்பிய பிரபலம்

 

Related Articles

Next Story