சன் பிக்சர்ஸ் போட்ட 2 கண்டிஷன்!... கடுப்பான அஜித்!.. கலாநிதிமாறனுக்கு அல்வாதான்!..

அஜித் இப்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. படப்பிடிப்பு சில மாதங்கள் நடந்த நிலையில் இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்ததால் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஒருகட்டத்தில் கடுப்பான அஜித் மே மாதம் இறுதிக்குள் விடாமுயற்சி படத்தை முடித்துவிடுங்கள். இல்லையெனில் ஜூன் மாதம் குட் பேட் அக்லி படத்திற்கு போய்விடுவேன். அதன்பின் அந்த படத்தை முடித்த பின்னரே விடாமுயற்சி படத்திற்கு வருவேன் எனவும் சொல்லிப்பார்த்தார்.

இதையும் படிங்க: டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?

ஆனாலும், வேட்டையன் படத்தை முடிக்கும் நிலையில் இருக்கும் லைக்காவால் விடாமுயற்சி படத்தை தொடர முடியவில்லை. லைக்கா படத்தை முடித்து அதை வியாபாரம் செய்து அதில் வரும் பணத்தில்தான் விடாமுயற்சி பட வேலையை மீண்டும் அவர்கள் துவங்குவார்கள் எனத்தெரிகிறது.

எனவே, ஜூன் மாதம் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.

இதையும் படிங்க: கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கணும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

ஆனால், இப்போது இந்த படத்தில் சன் பிக்சர்ஸ் இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனெனில், இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2 கண்டிஷன்களை போட்டிருக்கிறது. ஒன்று, அஜித் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என சொல்லிவிட்டது. அதோடு, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித் 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டதாம்.

இதெல்லாம் அஜித்தின் லிஸ்டலையே கிடையாது. அவர் எந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். எனவே, சிறுத்தை சிவா இயக்கும் படம் வேறு தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவா - அஜித் கூட்டணியில் வெளியான விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இந்த கூட்டணி மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

Related Articles

Next Story