எல்லாருக்கும் செஞ்சிட்டா அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா.. அஜித் அதிரடியாக எடுத்த முடிவு..!

Ajithkumar: தமிழ் சினிமாவில் தனக்கு இருக்கும் புகழை பயன்படுத்தி கொள்ளாமல் அமைதியாக தன் போக்கில் போகும் நடிகர் என்றால் அது அஜித்குமார் தான். அப்படி இருக்கும் அஜித்தே தற்போது விடாமுயற்சி படத்துக்கு ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறாராம்.

துணிவு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் கூட அஜித் தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டாமல் தான் இருந்தார். முதலில் விக்னேஷ் சிவனை இயக்குனராக ஃபிக்ஸ் செய்ய அவர் சொன்ன கதையில் அஜித்துக்கு சம்மதம் இல்லையாம். இதனால் அவர் வேண்டாம் என கழட்டிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்! போகும் போது என்ன சொல்லிட்டு போயிருக்காரு பாருங்க

இதை தொடர்ந்து மகிழ் திருமேனியை இயக்குனராக ஓகே செய்தார். ஆனால் அவர் சொன்ன கதைகளும் அஜித்துக்கு திருப்தி இல்லையாம். உடனே ஒரு ஹாலிவுட் பட சிடியை கொடுத்து இந்த கதை எப்படி என மகிழ் திருமேனி கேட்க அதையே ஓகே செய்து இருக்கிறார் அஜித்.

தற்போது பல மாத லேட்டுக்கு பின்னர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அஜர்பைஜானில் நடக்கும் இப்படப்பிடிப்பில் அஜித்துடன், அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: ஜெனிக்கே தெரியாம விவகாரத்தா..? ஏனுங்க சாமி இப்படி..? அடுத்து வெடிக்க தயாராகும் எழில் வாழ்க்கை..!

இதை கருத்தில் கொண்ட அஜித் தனக்கும் அப்படி ஒரு பாடல் வேண்டும். அதுவும் இண்ட்ரோ பாடலாக இல்லாமல் ஆக்‌ஷன் சீனுக்கு இருக்க வேண்டும் என விரும்பி இருக்காராம். அவரின் ஆசைக்கு ஓகே சொல்லிய அனிருத் அப்படி ஒரு பாட்டை இசையமைத்து விட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story