Connect with us

latest news

ஜெனிக்கே தெரியாம விவகாரத்தா..? ஏனுங்க சாமி இப்படி..? அடுத்து வெடிக்க தயாராகும் எழில் வாழ்க்கை..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனியின் அப்பா விவகாரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்க நியாயம் கேட்டு செழியன் வீட்டில் இருந்து ராமமூர்த்தி, ஈஸ்வரி, பாக்கியா, கோபி வந்து இருக்கின்றனர். ஒருகட்டத்தில் ஜோசப் எல்லாரையுமே அவமானப்படுத்தி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் ஈஸ்வரி விவகாரத்துனு போனா குழந்தை யாரிடம் இருக்கணும்னு பேச்சு வரும். எங்க வீட்டு குழந்தை செழியனிடம் தான் இருக்கணும் என்கிறார். நாங்களும் பார்க்க வேண்டிய இடத்தில் பாத்துக்குறோம் எனக் கூறி கோபத்தில் கிளம்பி விடுகிறார். 

இதையும் படிங்க: இப்படியே மாத்தி மாத்தி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி? யார் பெருசுனு அடிச்சு காட்டுறது..!

ஜெனி யாரை கேட்டு டிவோர்ஸ் அனுப்புனீங்க எனக் கோபப்பட மரியம் அவர் வாயை அடைத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் பாக்கியா ஜெனி என்னவோ பேச வரா ஏன் தடுக்குறீங்க எனக் கேட்க அவளுக்கு என்ன தெரியும் எனக் கேட்டு அமைதியாக்கி விடுகின்றனர். பாக்கியாவும் வருத்தத்தில் கிளம்பி விடுகிறார். 

வீட்டுக்கு வரும் ஈஸ்வரி கோபத்தில் கொதிக்கிறார். விவகாரத்து பண்ணிட்டு செழியனுக்கு வேற பொண்ணை கல்யாணம் செய்து வைக்கலாம் என்கிறார். செழியன் இந்த விவகாரத்துக்கு ஜெனி எப்படி ஓகே சொன்னா அவளிடம் கேட்கணும் என கோபமாக அவர் வீட்டுக்கு கிளம்புகிறார். அவருடன் எழிலும் கூட போகிறார்.

இதையும் படிங்க: இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்! போகும் போது என்ன சொல்லிட்டு போயிருக்காரு பாருங்க

ஒன்னும் செய்வதறியாமல் பாக்கியா ஒரு பக்கம் உட்கார்ந்து அழுக ஈஸ்வரியும் அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் கணேஷ் கால் செய்ய அருகில் அமிர்தா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் பாக்கியா. இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top