கலைஞர் முன் அஜித் பேசிய ’அந்த’ சம்பவம்… பிரச்னைக்கு காரணமான ஷாலினி… என்ன நடந்தது?

Shalini Ajith: நடிகர் அஜித்துக்கு தன்னுடைய மனைவி மீது இருக்கும் காதல் கோலிவுட்டே அறிந்த சேதி தான். அந்த விஷயத்தில் பிரச்னை வந்தால் சும்மா இருப்பாரா? அப்படி உருவானது தான் கலைஞர் விழாவில் அஜித் பேசிய அந்த தக் லைஃப் சம்பவமும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய அஜித் எந்த பட புரோமோஷனுக்கும் வெளிவருவது இல்லை. பொது மேடைகளில் ஆள் இல்லை. இப்படி தன்னை தனிப்படுத்தி கொண்டு இருப்பவர். ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும் முதல் ஆளாக வந்து நிற்பார். பல சினிமா மேடைகளில் அவரை பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

ஆனால் ஒரு கட்டத்தில் அது முடிவுக்கு வந்தது. பாசதலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி கோலிவுட்டினரால் கொண்டாடப்பட்டது. இதன் மேடை ஏறிய அஜித்குமார், கலைஞர் அய்யாவிற்கு வேண்டுகோள், இனிமேல் சென்சிட்டிவான விஷயங்களுக்கு, சமூக விஷயங்களுக்கு சினிமா ஆட்கள் தலையிட வேண்டாம் என நினைக்கிறேன். ஒவ்வொரு முறை இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது சினிமாவில் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வர வைக்கிறார்கள்.

எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள் எனப் பேசி இருப்பார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் கருணாநிதி அருகில் இருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டினார். இது பெரிய பிரச்னையாகி பின்னர் அஜித் மன்னிப்பு கேட்டதாக கூட ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இந்த பேச்சுக்கு பின்னால் இருந்தது ஷாலினி தானாம்.

இதையும் படிங்க: பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?

பொதுவாக மனைவியை தன் கை பக்கத்திலே வைத்து கொள்ளும் பழக்கம் கொண்டவர் அஜித். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அஜித் ஒரு பக்கம், ஷாலினி ஒரு பக்கம். ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்த தொல்லை எனக் கடுப்பானவர் தான் மேடையில் அப்படி பேசியதாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story