Categories: latest news

இதனாலதான் கேப்டன் ‘தூ’ன்னு துப்பினார்.. விஜயகாந்த் வீட்டிற்கு வரும் அஜித்!. இவரே சொல்லிட்டாரு..

Actor Ajith: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித் மொத்தப் படப்பிடிப்பையும் அஜர்பைஜானில்தான் நடத்துவதால் முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டுதான் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் படம் ஆரம்பித்ததே மிகவும் தாமதமாகத்தான். அதனால் ஏப்ரலில் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு விடாமல் 14 மணி நேரம் சூட்டிங்கில் இருக்கிறாராம் அஜித். அதன் காரணமாகவேதான் மகள் பிறந்த நாளின் போது கூட ஒட்டுமொத்த குடும்பத்தையும் துபாய்க்கு வரவழைத்து பிறந்த நாளை கொண்டாடினார் அஜித். அந்தளவுக்கு முழு மூச்சுடன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஷாலுமாதான் என் உலகம்! வேற எதுவும் இல்லடா.. வைரலாகும் அஜித் – ஷாலினியின் புகைப்படம்

இதனால்தான் விஜயகாந்த் மறைவிற்கு கூட அஜித்தால் வரமுடியவில்லை. ஆனால் உண்மைத்தன்மை என்னவென்று தெரியாமல் அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. அதுவும் விஜயகாந்த் வீட்டிற்கு வந்து நேரில் தன் இரங்கலை தெரிவிக்க அஜித் நள்ளிரவில் நேரம் கேட்டதாகவும் அதற்கு விஜயகாந்த் குடும்பத்தார் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் அதெல்லாம் சுத்தப் பொய் என மீசை ராஜேந்திரன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: அஜித் சாரை பொறுத்தவரைக்கும் கேப்டன் இறந்த சமயத்தில் வெளி நாட்டிற்கு ஃபிளைட்டில் சென்று கொண்டிருந்தார். இன்னும் இந்தியா திரும்பவில்லை. நான் கேள்விப்பட்ட வரைக்கும் இந்தியா திரும்பியதும் கண்டிப்பாக கேப்டன் நினைவிடத்திற்கு அஜித் வர இருக்கிறார். அண்ணியாரையும் சந்திக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: புரடெக்‌ஷன் சாப்பாட்டில் இப்படி ஒரு விபரீதம் நடந்ததா? அஜித் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் கேப்டனுக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும். அஜித் சார் மீது எந்த வருத்தமும் இல்லாதவர் கேப்டன். அந்த நள்ளிரவில் நேரம் கேட்டது எல்லாம் ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான செய்தி. தயவு செய்து அந்த மாதிரியான பொய்யான செய்தியை பரப்பாதீர்கள். இப்படி செய்யப் போய்தான் அன்றே கேப்டன் பத்திரிக்கையாளர்களை பார்த்து தூ என துப்பினார். அதுவும் ஒரு சில பத்திரிக்கையாளர்களை சொல்கிறேன் என மீசை ராஜேந்திரன் கூறினார்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago