Connect with us
ajithkumar

Cinema News

தனது உதவியாளாரிடம் தல கேட்ட அந்த ஒரு விஷயம்… இப்படிபட்டவரா அஜித்!… என்ன மனுஷன்யா!…

Ajith Kumar: அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாய் அறிமுகமானார். பின் வாலி, தீனா, வில்லன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

இவர் பின் பில்லா, விஸ்வாசம் போன்ற பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சினிமாவை தாண்டி நிஜ வாழ்வில் மிகச்சிறந்த மனிதரும் கூட. உதவி என கேட்டு வருபவர்க்கு தவறாமல் உதவி செய்பவர். ஆனால் அவர்களிடம் தான் செய்த உதவியை எக்காரணம் கொண்டும் வெளியில் யாரிடமும் சொல்லகூடாது எனவும் மேலும் தன்னிடம் ஒரு முறைதான் உதவி என்று வரவேண்டும் எனவும் கூறிவிடுவாராம்.

இதையும் வாசிங்க:குட்டி ஸ்டோரியை சொல்ல ரெடியான விஜய்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்த ‘லியோ’ டீம்

இவர் சமீபத்தில் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம்தான் விடாமுயற்சி. இத்திரைப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா மற்றும் ரெஜினா கெசேந்திரா நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் படபிடிப்புகள் அஸர்பெய்ஜானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படபிடிப்பிற்கு அஜித் தாமதமாக வருவதாகவும் அதனால் படபிடிப்பு முடிவதற்கு இன்னமும் காலம் ஆகும் எனும் வதந்திகள் சமீபத்தில் பரவின.

இதற்கு அஜித் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அஜித் எப்படிபட்டவர் என்பதை நமக்கு காட்டுகிறது. அஜித்துக்கு எப்போதும் உணவினை பறிமாறுபவர்தான் மோகன் . ஒரு முறை அஜித் சாப்பிடும்போது அந்த சாப்பாட்டில் ஏதோ ஒரு குறை இருந்துள்ளது. ஆனால் அஜித் அதை அந்த நிமிடம் அவரிடம் கேட்காமல் சாப்பிட்டுவிட்டாராம். சிறிது நேரம் கழித்து மோகனை அழைத்து நான் எனக்கு திருமணம் ஆன நாள் முதல் பெரும்பாலும் உங்கள் கையால்தான் சாப்பிடுகிறேன்.

இதையும் வாசிங்க:கடுப்பில் இருந்த படக்குழு… ஆனால் கண்ணழகை காட்டி கவிழ்த்த அமலாபால்…

எனக்கு நீங்கள் பரிமாறும் உணவில் ஏதும் பிரச்சினை இருந்தால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அதனால் படபிடிப்பு தாமதமாகும். இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படலாம். அதனால் இனிமேல் இந்த மாதிரியான தவறுகளை செய்யாதீர்கள் என கேட்டுள்ளார்.

என்னதான் தான் ஒரு நடிகராய் இருந்தாலும் தயாரிப்பாளரின் மனநிலைமையையும் புரிந்து கொள்ளும் அஜித் கண்டிப்பாக தனது பக்கத்திலிருந்து படக்குழுவிற்கு எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்க மாட்டார். அதனால் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பு அஜித்தால் தாமதமாக வாய்ப்பே இல்லை என அஜித்துக்கு நெருங்கியவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:எல்லாமே ஒரு பப்ளிசிட்டிதான்… லியோவை பங்கம் பண்ணிய ராஜன்… வாய்ப்பே இல்ல ராஜா…

 

google news
Continue Reading

More in Cinema News

To Top