Connect with us

Cinema News

காசு விஷயத்துல சூர்யாவோட அப்பா என்ன மாதிரி ஆள் தெரியுமா?.. கஜினி பட கதையை சொன்ன தயாரிப்பாளர்!..

பழம்பெரும் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் காசு விஷயத்தில் ரொம்பவே கறாரான ஆள் என்பதை இயக்குனர் ஏ.எல். விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான அழகப்பன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது சிவகுமார் பற்றி கூறியுள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே இளம் நடிகராக அறிமுகமான சிவகுமார் பல படங்களில் முருகனாகவும் கிருஷ்ணராகவும் வேடமிட்டு நடித்துள்ளார். சிந்துபைரவி திரைப்படம் சிவகுமாருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

இதையும் படிங்க: பிரபாஸை பார்த்து விஜய் கத்துக்கணும்!.. கல்கி படத்துக்காக ரெபல் ஸ்டார் பண்ணது என்ன தெரியுமா?..

பத்ரகாளி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் சிவகுமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளன. சினிமாவை விட்டு விலகி பேச்சாளராக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சொற்பொழிவுகளை ஆற்றி வரும் சிவகுமார் தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாற்றியுள்ளார்.

கஜினி பட சமயத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு 80 லட்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. அந்த பணத்தை கொடுத்துவிட்டு படத்தின் ஹிந்தி ரைட்ஸ் உரிமையை காத்து வாங்கிக் கொள்ளுங்கள் படம் பெரிய அளவில் போகும் உங்க பையன் சூர்யாவும் பெரிய ஆளா ஆகிடுவான்னு கூறினேன். ஆனால் அவர், ”அழகப்பா பணம் வீட்டுக்குள்ள வரணும் வெளியே போகக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: பிரபாஸை பார்த்து விஜய் கத்துக்கணும்!.. கல்கி படத்துக்காக ரெபல் ஸ்டார் பண்ணது என்ன தெரியுமா?..

அந்த படத்தை சிரஞ்சீவி மச்சான் அல்லு அரவிந்த் வாங்கி வெளியிட்டார். அவருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. சிவகுமாருக்கு பேரு புகழ் எல்லாம் கிடைத்தது. அது அவரோட பாலிசி, அந்த அளவுக்கு சிரமப்பட்டு சினிமாவுக்குள் வந்தவர் அவர். அதானால், தான் தன்னிடம் இருந்து பணம் வெளியே போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top