சான்சே இல்ல!.. விஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!. பிரபல தயாரிப்பாளர் நெகிழ்ச்சி...

இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. விஜயின் சில படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைத்து பாடிய ‘நாக்க மூக்க’ பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. நான் என்கிற திரைப்படம் மூலம் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்ததால் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மாறினார். அதிலும், பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் நல்ல வசூலை பெற்றது. அதன்பின், விஜய் ஆண்டனியின் அனைத்து படங்களும் தமிழ் […]

Update: 2024-06-06 11:00 GMT

இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. விஜயின் சில படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைத்து பாடிய ‘நாக்க மூக்க’ பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. நான் என்கிற திரைப்படம் மூலம் நடிகராகவும் மாறினார்.

தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்ததால் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மாறினார். அதிலும், பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் நல்ல வசூலை பெற்றது. அதன்பின், விஜய் ஆண்டனியின் அனைத்து படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இதையும் படிங்க: ரசிகரை கைநீட்டி அடிக்க முயன்ற கே.எஸ்.ரவிகுமார்… அவ்ளோ கோபமா மனுஷனுக்கு..?

எனவே, தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க துவங்கினார். இவரின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படமும் நல்ல வசூலை பெற்றது. ஆனால், கடைசியாக வெளியான ரோமியோ திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. இப்படத்தை கிண்டலடித்த புளூசட்ட மாறனை திட்டி ஒரு அறிக்கையும் வெளியிட்டார் விஜய் ஆண்டனி. அதோடு, ரோமியோவை அன்பே சிவம் படமாக மாற்றிவிட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார். ஆனாலும் அப்படம் ஓடவில்லை.

ரோமியோ படத்திற்கு முன் வெளியான கொலை, ரத்தம் ஆகிய படங்களும் ஓடவில்லை. திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரின் மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியை வைத்து 'அக்னி சிறகுகள்' என்கிற படம் உருவானது. இதில் அருண் விஜயும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கியிருந்தார். ஆனால், என்ன காரணமோ இப்படம் இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் ஆண்டனியை நான் இன்னொரு விஜயகாந்தாகவே பார்க்கிறேன். அவ்வளவு எளிமையானவர் அவர். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தனக்கு கேரவான் கூட வேண்டாம் என சொல்லிவிட்டார். அருகில் இருக்கும் பிளாட்பார்ம் மற்றும் திட்டுகளில் அமர்ந்து கொண்டிருப்பார். சாதாரண அறைகளில் தங்கினார். எனக்கு எந்த செலவையும் அவர் வைக்கவில்லை’ என பேசியிருந்தார்.

Tags:    

Similar News