தேசிய விருது வாங்கிய தமிழ் இயக்குனர் அட்ஜெட்ஸ்மென்ட்டுக்கு அழைத்தார்... ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார் நடிகை

By :  AKHILAN
Update: 2025-05-31 08:55 GMT

Actress: சினிமாத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை அவ்வப்போது எழுந்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த முறை தமிழ் இயக்குனர் ஒருவர் மீது பிரபல நடிகை பெரிய குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

பெண்களுக்கு எல்லா துறையில் இருக்கும் பிரச்னையை விட சினிமா துறையில் அதிகம் தான். அதிலும் நடிக்க ஆசைப்பட்டு வரும் பெண்களை தராளமாக தங்கள் படுக்கைக்கு அழைக்கும் பலரும் இன்னமும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கூட இதில் விதிவிலக்கு இல்லை. தமிழின் முன்னணி பாடலாசிரியர் மீது பாடகி சின்மயி வைத்து மீ டு குற்றச்சாட்டால் அவரால் தன்னுடைய சினிமா கேரியரையே தமிழ் சினிமாவில் தொலைத்து விட்டு இருக்கிறார்.

சின்னத்திரை நடிகை ஒருவருக்கு வாய்ப்புக்காக வீடியோ காலில் அந்தரங்கமாக பேச வைத்தது எல்லாமே கொடுமையின் உச்சமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா தமிழ் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, தேசிய விருது வாங்கிய இயக்குனர் மற்றும் தேசிய விருது வாங்கிய நடிகர் கூட்டணியில் உருவான படத்தில் நான் நடித்தேன்.

படத்தின் ஷூட்டிங் நடந்து நான் பாம்பே வந்த சமயத்தில் எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. அந்த இயக்குனருக்கோ ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும். அதனால் ஒரு மீடியேட்டர் வைத்து தான் பேசுவார். 

 

அவர் தான் இவருக்கு மாமா வேலை பார்த்தார். எனக்கு அப்படிதான் சொல்ல தோன்றுகிறது. அந்த ஆளை வைத்து இயக்குனர் எனக்கு மெசேஜ் செய்தார். பாம்பே வந்து உன்னை பார்த்து கொள்ளவா எனக் கேட்டு இருந்தார். நள்ளிரவு இப்படி ஒரு மெசேஜ் குறித்து முதலில் எனக்கு சந்தேகமே இல்லை.

பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென போன் வந்தது. பேசும்போது உங்களுடைய போட்டோஷூட் சாருக்கு பிடித்து இருந்தது. ஆனால் படம் முடியும் வரை நீங்கள் அவருடன் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அப்போதும் அவர் நேரடியாக சொல்லாமல் கோட் வார்த்தைகளாலே பேசினார்.

நானாக ஒரு முடிவு வந்து பேசிவிட கூடாது என அமைதியாக பேசி வந்தேன். ஒருக்கட்டத்தில் அவர் பேசியது அந்த ரூட்டுக்கு வந்த பின்னர், நான் உங்க சாருடன் படுக்கைக்கு வர ஆசைப்படுகிறாரா? என்னுடைய வேலைக்காக என்னை கொடுக்க நான் தயாராக இல்லை.

அப்படி ஒரு எண்ணத்தில் வருபவர்களை ஒப்பந்தம் செய்துக்கொள்ளுங்கள் எனக் கூறினேன். இன்னும் அந்த வார்த்தையை மறக்கவே இல்லை எனவும் சுர்வீன் தெரிவித்து இருக்கிறார். தற்போது யார் அந்த தமிழ் இயக்குனர் என்ற பேச்சுவார்த்தை கிளம்பி இருக்கிறது.

இவர் கூறிய கூற்றுப்படி பார்க்கையில், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவர் தான் தேசிய விருதுக்கு பின்னர் கூட்டணியில் பல படங்கள் செய்ததாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். தெலுங்கில் ராணா மற்றும் வெங்கடேஷ் நடித்து வெளியான ராணா நாயுடு படத்தில் நடித்தவர் சுர்வீன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News