ஆடையால் வெடித்த சர்ச்சை.. பளார்னு விட்டுருப்பேன்! கூல் சுரேஷை கார்னர் செய்த ஐஸ்வர்யா

By :  ROHINI
Published On 2025-05-20 10:23 IST   |   Updated On 2025-05-20 10:23:00 IST

coolsuresh

கடந்த சில நாட்களுக்கு முன்பு காமெடி நடிகராக கலக்கி வரும் ரோபோ சங்கர், கதையின் நாயகனாக நடிக்கும் அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினியாகவும், ஒரு சில படங்களில் நடித்தும் உள்ள ஐஸ்வர்யா ரகுபதி தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சிக்கு அவர் சேலையும், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து வந்திருந்தார். அதைப்பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், நீங்கள் அணிந்து இருக்கும் ஆடை வெயிலுக்கு இதமானதா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா, இது இந்த டாபிக்குக்கு தேவையில்லாத விஷயம் என்று கூறிய அவர், இந்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறி தவிர்த்து விட்டார்.

இந்த நிலையில் இது சம்பந்தமான செய்திகள் வெளியாகி அந்த பத்திரிகையாளருக்கு எதிராக கண்டனங்கள் வெளியான நிலையில், தான் தவறாக எதுவும் கேட்கவில்லை என்றும், வெயிலை சமாளிப்பது குறித்து அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா பல டிப்ஸ்கள் கொடுத்தார். அப்போது தான் இந்த கேள்வியை கேட்டதாவும் அந்த பத்திரிகையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரம் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா கருத்து தெரிவிக்கையில், அந்த கேள்வி என்னை நோக்கி கேட்கும்போதே அவர் என்ன நோக்கத்தில் கேட்கிறார் என்பது புரிந்து விட்டதாகவும், ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து காற்று வாங்க வந்திருக்கிறாயா? என்று கேட்கிறார் என்றும் எனக்கு தெரிந்து விட்டது.

இதற்கு பதில் சொல்வதா? அல்லது மேடை நாகரிகம் கருதி கடந்து செல்வதா? என்று நினைத்து அதை தவிர்த்தேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரை தேடினேன். அவர் கிடைக்கவில்லை.

இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக வெற்று விளம்பரத்துக்காக பல மேடைகளில் கோமாளித்தனமாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு நடிகர் என் கழுத்தில் மாலை போட்டதை அப்போதே கண்டித்திருக்க வேண்டும். எல்லோரும் சொன்னதை போல போலீசில் புகார் கொடுத்து அவரை உள்ளே தள்ளி இருக்க வேண்டும். அல்லது அந்த மேடையிலேயே அவரது கன்னத்தை பழுக்க வைத்திருந்தாலோ இது இங்கு வரைக்கும் வந்து இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்.

அதை அப்படியே கடந்து போனதால் என்னை பலவீனமானவள் என்று நினைக்க கூடாது. நான் பலவீனமானவள் என்று நினைத்து உங்களை போன்ற ஆண்கள் தங்கள் பலத்தை என்னிடம் காட்ட நினைக்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. நான் ஏன் இதை கடந்து போகிறேன் என்றால், என் வாழ்க்கையில் நல்ல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. நான் அதில் போகஸ் செய்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். ஏற்கனவே கூல் சுரேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர், ஐஸ்வர்யாவுக்கு மாலை போட முயற்சிக்க அதை அவர் தடுத்து முறைத்ததுடன் அந்த நிகழ்ச்சியை சுமுகமாக கையாண்டார். அவருக்குத்தான் மீண்டும் இது போல் பிரச்சினை வெடித்துள்ளது.

Tags:    

Similar News