10 கோடி கொடுத்தாலும் நோ சொன்ன சந்தானம்... சிம்புவுக்கு மட்டும் ஓகேன்னா சும்மாவா?

By :  SANKARAN
Update: 2025-05-08 18:00 GMT

சந்தானம், ஆர்யா, சிம்பு இருக்குற மேடையில நெகிழ்ச்சிகரமான பல சம்பவங்கள் பேசப்பட்டன. சமீபத்தில் நடந்த பட விழாவில் சந்தானம் பேசியது நெஞ்சைக் குளிரச் செய்தது. அது இதுதான். நான் வந்து லொள்ளு சபால நடிச்சிக்கிட்டு இருக்கேன். அது மிகப்பெரிய ஹிட். அதுக்கு ஒரு ஆடியன்ஸே இருக்காங்க. அப்போ சிம்பு படத்துல நடிக்கும்போது லொள்ளு சபா போடுற நேரம் சூட்டிங்கை பிரேக் பண்ணிட்டு டிவி முன்னாடி உட்கார்ந்துடுவாராம்.

கொஞ்ச நேரம் சிரிச்சிப் பார்த்துட்டு திரும்ப சூட்டிங்குக்கு வந்துடுவாராம். வந்ததும் மன்மதன் படத்துல யாரை காமெடியனா போடலாம்னு டிஸ்கஷன் நடந்துக்கிட்டு இருந்தது. அப்போ வடிவேலு பீக்ல இருக்காரு. அப்போ சிம்புவுக்கு லொள்ளுசபா சந்தானம் மைன்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. அவரு பேரை சொன்ன போது என்னங்க உங்க முடிவு?

வடிவேலுவை போட்டா வியாபாரம் நல்லா போகும். புதுமுக நடிகரைப் போட்டா யாரு பார்ப்பா? ரிஸ்க் எடுக்காதீங்கன்னு நிறைய பேரு சிம்புகிட்ட சொல்றாங்க. இல்லங்க. இந்த நபர் பக்காவா பண்ணுவாருன்னு சிம்பு சொல்றாரு. அவ்வளவு எதிர்ப்புக்கு இடையிலேயும் மன்மதன் படத்துல நடிக்க வச்சாரு சிம்பு.

சந்தானம் முதன் முறையா பெரிய ஸ்க்ரீன்ல வரப்போறாரு. அதுவும் சிம்புவோட மன்மதன் படம். அவரை சாதாரணமா காட்டக்கூடாது. அவரு வரும்போதே கிளாப்ஸ் வாங்கணும். அப்படிங்கறதுக்காக பாபி பாபி பாபின்னு ஒரு டயலாக் வச்சி அவருக்கு இன்ட்ரோ கொடுத்தாராம் சிம்பு.

அந்த நன்றிக்கடன் தான் இன்னைக்கு சிம்பு என்ன சொன்னாலும் கேட்பேன்னு சந்தானம் சொல்றாரு. சிம்பு கூப்பிட்டதால அவரோட 49வது படத்துல சந்தானம் நடிக்க சம்மதிச்சிருக்காரு.

சந்தானம் தொடர்ந்து காமெடியன்ல இருந்து ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல அவரு படங்கள் சரியா ஓடல. அந்த நேரத்துல ஒரு தயாரிப்பாளர் வந்து 10 கோடி தாரேன். ஒரு பெரிய நடிகர் படத்துல காமெடி ரோல் பண்ணுங்கன்னு சொல்றாரு. ஏற்கனவே இவர் ஹீரோ படங்களில் கமிட்டாகி இருந்ததால அவர் அதுக்கு மறுத்துட்டாரு.

அவர் நினைச்சிருந்தா அதை ஒத்துக்கிட்டு பல கடன்களை அடைச்சிட்டு நிம்மதியா தொடர்ந்து காமெடியனா நடிச்சிருக்க முடியும். ஆனாலும் அவர் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களைக் கைவிடல. இன்னைக்கு வரைக்கும் சந்தானம் பற்றி அவரு கூட இருந்த எல்லாரும் அவரு பேரைச் சொல்லக் காரணம் அவர் செஞ்ச உதவிதான்.


என்னன்னா அப்போ அவரு நடிக்கிறதுக்கு தினமும் 15 லட்சம் கொடுப்பாங்களாம். அதுல பெரும் தொகையை அவரு கூட இருந்தவங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துடுவாராம். அதனாலதான் இன்னைக்கும் அவரைப் போற்றிப் புகழ்றாங்க. சிம்புவுக்கு இப்போ ஒரு வெற்றி அவசியம். அது எஸ்டிஆர் 49 ஆ கூட இருக்கலாம்.

இன்னைக்கு ஒரு வெற்றி அவசியம் தேவை. தமிழ்சினிமாவுல காமெடிக்கு பெரிய வறட்சி. அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர் ஆர்யா. அந்தவகையில சந்தானம் என்றென்றும் நன்றி மறக்காதவர். இதற்கிடையில் அஜித் விடாமுயற்சி படத்துக்காக சந்தானத்தை நடிக்கக் கேட்டாராம். அதுக்கு சந்தானமும் ஓகே சொல்லிருக்காரு. அப்போ அது விக்னேஷ் சிவன் கையில இருந்ததாம். அதுக்கு அப்புறம் கதை எல்லாம் மாற்றி மகிழ்திருமேனி கைக்குப் போய் வேற மாதிரி ஆனது. 

Tags:    

Similar News