வெங்கட்பிரபுவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் பிரபலம்!.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்!..

இயக்குனர் வெங்கட்பிரபு தொடர்பான ஒரு முக்கிய செய்தி வெளியே கசிந்துள்ளது.

By :  Admin
Update: 2024-09-21 01:30 GMT

வெங்கட் prabu

Venkat prabu: இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். அதன்பின் சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கவே அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.

சரோஜா, கோவா என சில படங்களை இயக்குனர், வெங்கட்பிரபு படம் என்றாலே நண்பர்களுடன் ஜாலியாக படம் பார்க்க போகலாம் என சொல்லலாம். அதேநேரம் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் பெரிய நடிகர்களை வைத்தும் வெங்கட்பிரபு ஹிட் கொடுப்பார் என்கிற நம்பிக்கையை பல நடிகர்களுக்கும் ஏற்படுத்தியது.

சூர்யாவை வைத்து மாஸ், கார்த்தியை வைத்து பிரியாணி என சில படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். அதன்பின் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் வெங்கட்பிரபு ஒரு சிறந்த இயக்குனர் என்பதை காட்டியது.

இதையடுத்து விஜயை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்படி உருவான கோட் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டரில் ஓடி வருகிறது. இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார்.



அதேசமயம், சிவகார்த்திகேயன் டீலில் விட்டுவிட்டால் சென்னை 28 படத்தின் 3ம் பாகத்தை எடுக்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அங்குதான் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை 28 படத்தின் தலைப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மகன் சரண் கொடுக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

சென்னை 28 படத்தின் 2ம் பாகம் எடுத்தபோது தலைப்புக்காக சரணுக்கு 50 லட்சம் கொடுப்பதாக சொன்ன வெங்கட்பிரபு அதை செய்யவில்லை. எனவே 3ம் பாகத்திற்கு அவர் படத்தின் தலைப்பை கொடுக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. ஒருவேளை 2ம் பாகத்திற்கு 50 லட்சம், 3ம் பாகத்திற்கு 50 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாயை கொடுத்தால் சரண் சம்மதம் சொல்வார் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News