சும்மாவே மீம்ஸ் போட்டு கலாய்க்குறாங்க.. இதுல இந்த படமும் ரீ ரிலீஸா? பாவம்தான் சூர்யா

By :  ROHINI
Published On 2025-06-15 18:00 IST   |   Updated On 2025-06-15 18:00:00 IST

surya

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. அந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை .அதற்கு முன்னதாக வெளியான கங்குவா திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த இரு படங்களாலும் சூர்யாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒரு பெரிய ஹிட்டை கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவருடைய எந்த படங்களும் ஹிட் கொடுக்காத நிலையில் கதை தேர்வில் அவர் தவறு ஏதும் செய்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு திறமை மிக்க ஆற்றல்மிக்க நடிகர் சூர்யா. சினிமாவையும் தாண்டி பொது சேவையில் தன்னுடைய பங்கை எப்பொழுதும் கொடுத்து கொண்டிருப்பவர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை வழங்கி இன்று அவர்களின் நல் வாழ்விற்கு உதவியாக இருந்து வருகிறார் .

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர்களுடைய படங்களால் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே ட்ரோலுக்கு பேர் போன திரைப்படம் அஞ்சான். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .லிங்குசாமி இந்த படத்தை இயக்கியிருந்தார் .திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் அமைந்த பாடல்கள் நல்ல ஒரு வெற்றியை பெற்றன. ஆனால் படம் மக்களை கவரவில்லை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லிங்குசாமி பேசியது மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. கங்குவா திரைப்படத்திற்கு எப்படி ஒரு பெரிய ஹைப்பை கொடுத்தார்களோ அப்படி லிங்குசாமியும் இந்த படத்திற்கு பெரிய அளவில் பில்டப் செய்திருந்தார்.

anjan

ஆனால் அந்த அளவு படத்தில் ஒன்றும் இல்லை என படம் வெளியானதும் லிங்குசாமியையும் சூர்யாவையும் நெட்டிசன்கள் வச்சு செய்தனர். இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீ எடிட் செய்து வெளியிட்டிருந்தார்கள் .இது youtubeல் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. அதை பார்க்கும் பொழுது நமக்கு ஏன் இந்த ஐடியா தோன்றவில்லை எனை நினைத்து நானும் ரீ எடிட் செய்த அந்த காப்பியை மீண்டும் தமிழில் ரீ ரிலீஸ் பண்ண போகிறேன். அதற்கான வேலைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன என லிங்குசாமி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News