அழிவை நோக்கி போகும் ஜெயம் ரவி! கேரக்டர் நாசமாகுவதை எச்சரிக்கும் பிரபலம்

கெனிஷா மோகத்தில் கிடக்கும் ஜெயம் ரவி.. இது நல்லது இல்ல

By :  rohini
Update: 2024-09-25 11:24 GMT
ஜெயம் ravi

சமீபத்தில் ஜெயம் ரவி ஆர்த்தி இவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைதான் தற்போது கோலிவுட்டில் பெரும் பூதாகரமாக மாறி இருக்கிறது. இப்போது கூட ஜெயம் ரவி தன்னுடைய ஈசிஆர் வீட்டில் இருக்கும் உடைமைகளை ஒப்படைக்கும் படி ஆர்த்தி மீது புகார் அளித்திருந்தார். இதை பற்றி பிரபல அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் பல விஷயங்களை கூறியிருக்கிறார்.  உடமைகள் என்று கூறுவது ஒருவேளை ஆர்த்தி மற்றும் அவருடைய மகன்களாக கூட இருக்கலாம்.

விவாகரத்து முடியும் வரை ஆர்த்தி தான் ஜெயம் ரவியின் மனைவி. அதை யாராலும் மறுக்கவே முடியாது. அதனால் அவர்களை கூட தன்னிடம் கொடுக்கும்படி கூறியிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஆர்த்தி அவருடைய உடமைகளை சொத்துக்களை தர மறுப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. கணவரே போன பிறகு அவருடைய சொத்துக்கள் உடமைகளை வைத்து ஆர்த்தி என்ன செய்யப் போகிறார் .

அதனால் அந்த கருத்து என்பது தவறான கருத்தாகும். மேலும் பிரபல பாப் பாடகி கெனிஷா தொடர்பிருக்கு பிறகு தான் அவருடைய குடும்பத்திலேயே பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஆர்த்தியா கெனிஷாவா என்று கேட்டால் ஜெயம் ரவி கெனிஷா என்றுதான் சொல்லுவார். இதுவே மகன்களா என்று கேட்டால் அவர் என்ன சொல்ல முடியும்.

மகன்களை விட கெனிஷா அந்த அளவு முக்கியமாக போய்விட்டாரா ஜெயம் ரவிக்கு என பாண்டியன் கூறியிருக்கிறார். பிரச்சனை ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் தான் தவிர குழந்தைக்கு ஜெயம் ரவிக்கும் இல்லை. அப்புறம் ஏன் ஜெயம் ரவி குழந்தைகளை தவிர்க்கிறார் என தெரியவில்லை. அந்த அளவு கெனிஷா முக்கியமானவராக ஆகிவிட்டாரா ஜெயம் ரவிக்கு.

சமீபத்தில் நடந்த பிரதர் ஆடியோ நிகழ்ச்சிக்கு கூட அவருடைய அண்ணன் அக்கா இவர்களைத்தான் வரவழைத்து இருந்தாரே தவிர மகன்களை வரவழைக்க மறுத்துவிட்டார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி பேச்சிலும் கொஞ்சம் முரண்பாடு தெரிகிறது .ஏனெனில் சினிமாக்காரர்களை பொறுத்த வரைக்கும் ஒழுக்க கேடான சில பண்புகள் இருக்கத்தான் செய்யும் .பொது ஒழுக்கம் என்பது இருக்காது.

நடிகர்களைப் பொறுத்த வரைக்கும் பொது ஒழுக்கம் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும் .எம்ஜிஆரை எடுத்துக் கொண்டால் மது குடிக்காதீர் என்று சொன்னால் அவர் நிஜமாகவே மது குடித்ததில்லை. புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வார். அவர் குடித்ததே இல்லை. இப்படி தான் கொண்ட கொள்கையை சினிமாவிலும் பரப்பியவர் எம்ஜிஆர். ஆனால் இவர்கள் எல்லாம் அப்படி இல்லை.

ஜெயம் ரவியை பொறுத்த வரைக்கும் ஒரு தந்தையாகவோ ஒரு கணவராகவோ அவர் நடந்ததே இல்லை. இதுதான் ஜெயம் ரவியின் மீது இருக்கும் புகார். தன்னுடைய தவறை மறைக்கவே தனது மனைவி ஆர்த்தியின் மீது புகார்களை கொடுத்தவண்ணம் இருக்கிறார் ஜெயம் ரவி. ஆர்த்தியை பொருத்தவரைக்கும் கண்ணகி மாதவி கோவலன் கதை மாதிரிதான்.

எப்படியாவது தன்னுடைய கணவன் அந்த பெண்ணை விட்டு தன்னை தேடி வருவான் என பொறுமையாக இருந்தாள். அதைப் போலத்தான் ஆர்த்தியும் பொறுமையாக இருக்கிறார் .அமைதியாக இருக்கிறார் என என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது. இது ஜெயம் ரவியின் கேரக்டரை கொச்சைப்படுத்தும் செயலாகும். அது அவரே கெடுத்துக் கொள்கிறார். மேலும் தன்னுடைய சினிமா கெரியவரும் இதனால் பாதிக்கப்படும்.

அழிவை நோக்கி போகிற மாதிரி தெரிகிறது. எப்படி சிவாஜி எம்ஜிஆர் இவர்களெல்லாம் எங்கு போனாலும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறார்களோ அப்படித்தான் ஜெயம் ரவியும் ஆரம்பத்தில் இருந்தார். ஏனெனில் ரசிகர்களுக்கு நடிகர் என்பதையும் தாண்டி அந்த நடிகரை குடும்பத்துடன் பார்க்கும் போது ஏற்படும் ஒரு சந்தோஷம் இருக்கிறதே.

அதை ஒவ்வொரு நடிகரும் கொடுக்க வேண்டும் .ஆனால் அதை ஜெயம் ரவி இப்போது மறந்துவிட்டார். ரஜினி எங்கே போனாலும் தன் மனைவியை அழைத்துச் செல்கிறார் ஏனெனில் குடும்ப சகிதமாக தன் தலைவரை பார்க்கும் போது ரசிகர்களுக்கு அவ்வளவு ஒரு ஆனந்தம் ஏற்படும் .இதை ஜெயம் ரவியும் புரிந்து கொள்ள வேண்டும் என பாண்டியன் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News