அனிருத்தே ஓகே சொல்லிட்டாரு.. அப்ப கூட நான் செய்யல!.. டிடி சொன்ன சீக்ரெட்..

பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி. இவர் ஒரு சில சீரியல்களிலும் படங்களிலும் கூட நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்திலும் நடித்திருந்தார்.

அதோடு, நாளை வெளியாகவுள்ள மத்தகம் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். சமீப காலமாக தொலைக்காட்சியில் தலையை காட்டாமல் இருந்து வரும் டிடி, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த விஷயத்துல அட்லீதான் கில்லி.. அவர மிஞ்ச வேற ஆளே கிடையாது.. வெளிபடையாக சொன்ன டிடி

இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்துள்ளார். ஆனாலும் காஃபி வித் டிடி நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஒருமுறை விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஷோ புரொடியூசர் கூறியுள்ளார்.

அந்த பேட்டி தொடங்கி முடியும் வரை டாக் பேக்கின் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு கூறிக்கொண்டே இருந்தார். நாங்கள் இது குறித்து அனிருத்திடம் ஏற்கனவே கூறிவிட்டோம். அவரே ஒன்றும் சொல்லவில்லை. உனக்கு என்ன வந்தது என்று மிரட்டினார்கள். அப்போதும் கூட நான் அந்த கேள்வியை கேட்கவே இல்லை.

மற்ற கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டேன். எனக்கு தவறாக தெரிந்தால், அதை நான் செய்ய மாட்டேன். நான் சரியென்று நினைத்தால், அவர்கள் சொல்லாத கேள்விகளை கூட சிறப்பு விருந்தினரிடம் கேட்பேன்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு இது குறித்து அனிருத்திடம் அந்த ஷோ புரொடியூசர் கூறியுள்ளார். நான் எத்தனையோ முறை அந்த கேள்வியை கேட்க சொன்னேன். டிடி கேட்கவில்லை என்று. அதற்கு அனிருத். அதனால் தான் அவர் டிடி என்று பாராட்டினார் என்று டிடி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த வயசுலயே நான் எல்லாத்தையும் பண்ணேன்!.. பகீர் தகவலை சொல்லி அதிரவைத்த டிடி…

 

Related Articles

Next Story