கல்யாணத்துக்கு முன்னாடியே ரிட்டயர்டு பார்ட்டி தான்!.. லேடி சூப்பர் ஸ்டார் சோலியை முடித்த பிரபலம்?..

நடிகை நயன்தாரா தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் ரிட்டையர்டு ஸ்டேஜுக்கு வந்துவிட்டதாக யூடியூப் பிரபலம் அந்தணன் பேசியுள்ளார்.

நடிகை நயன்தாரா அறம் படத்துக்கு பிறகு தனது மார்க்கெட்டை அதிரடியாக உயர்த்தினார். 6 கோடி முதல் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா தற்போது எந்த படமாக இருந்தாலும் 10 கோடி ரூபாய் கொடுத்தால் நடிக்கிறேன் என அடம் பிடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பிரகாஷ்ராஜின் முதல் மனைவி ஏன் மறுமணம் செய்யலனு தெரியுமா? விவாகரத்து ஆகியும் இப்படி ஒரு முடிவா?

நயன்தாராவை வைத்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை குறைந்த பட்ஜெட்டில் தயாரித்தாலும் அந்தப் படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் அளவுக்கு கூட வசூல் வராததால் பல தயாரிப்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் கோலிவுட்டில் ஒட்டுமொத்தமாக நயன்தாராவை ஒதுக்கி தள்ளி வைத்து விட்டனர். அதன் காரணமாக தான் மற்ற மொழி படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தில் நயன்தாராவுக்கு எந்த நடிகர் அதிக சம்பளம் கொடுக்கிறாரோ அவரது படத்தில் கதை கூட கேட்காமல் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: முதல்ல மோடி பயோபிக் ஓடுமா? என்னது சத்யராஜ் நடிச்சிட்டாரா? அப்போ இது பார்ட் 2 வா?

தமிழில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் எனக்கு இருப்ப படங்கள் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கின்றன. ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நயன்தாரா மட்டும் நடித்த மாயா மற்றும் அறம் படங்கள் ஓடின.

ஆனால் அதன் பின்னர் நயன்தாரா சோலோவாக நடித்த டோரா, ஐரா, நெற்றிக்கண், ஓ2, கனெக்ட், அன்னபூரணி என அத்தனை படங்களும் ஃப்ளாப் தான். மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் அவர் இணைந்து நடித்த கோல்ட் திரைப்படம் ஓடவே இல்லை. தெலுங்கில் அவர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த காட்பாதர் திரைப்படமும் படுத்து விட்டது. அட்லீயால் ஷாருக்கான் படம் தப்பித்துக் கொண்டது.

இதையும் படிங்க: கூலி படத்தில் அந்த நடிகர் இல்லையாம்!.. பேன் இண்டியாவுக்கு வந்த ஆப்பு!.. அப்செட்டில் லோக்கி!…

 

Related Articles

Next Story