Connect with us
ajith

Cinema News

விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த மரணம்!. அதிர்ச்சியில் படக்குழு!.. சோதனை மேல் சேதனை…

Vidaymuyarchi: லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தில் அஜித் ஹீரோவாகவும், திரிஷா அவரின் மனைவியாகவும் நடிக்கவுள்ளார். துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிய பின் அஜித் நடிக்கவுள்ள படம் இது.

விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் படப்பிடிப்பு துவங்காமலேயே இருந்தது. சரியான கதை அமையவில்லை. திரைக்கதை அமைக்க நேரம் எடுத்தது, அஜித் பைக்கில் உலகை சுற்றப்போனது என பல காரணங்கள் இந்த படம் துவங்கப்படாமலே இருந்தது.

இதையும் படிங்க: கொஞ்சமாவது மெனக்கெடும் விஜய்!.. அலட்டிக்காம கோடிகளை அள்ளிப்போடும் அஜித்!. அவருக்கு மச்சம்தான்!…

இந்த படத்தின் கதையில் பல மாற்றங்களும் செய்யப்பட்டது. அஜித் சொன்ன ஒரு ஆங்கில் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு கதையை உருவாக்கினார்கள். ஆனால், அது சரியாக வரவில்லை. எனவே, மகிழ்திருமேனி ஒரு புதிய கதையை உருவாக்கினார். படப்பிடிப்பை எங்கு துவங்குவது என்பதிலும் குழப்பம் நீடித்து வந்தது.

ajith

ஒருவழியாக அஜர்பைசானில் படப்பிடிப்பை துவங்க முடிவெடுத்து சில நாட்களுக்கு முன்பு அஜித், திரிஷா, மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழு அஜர்பைசான் சென்றது. ஆனால், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. படக்குழு விரைவில் சென்னை திரும்பும் எனவும் செய்திகள் வெளியானது. அதன்பின், திரிஷா மட்டுமே சென்னை திரும்புவதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: அஜித்தோடு ஒப்பிட்டு வெங்கட்பிரபு சொன்ன ஒரு வார்த்தை.. மொத்தமா சரண்டரான சிம்பு!…

இந்நிலையில், இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்து வந்த மிலன் என்பவர் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைசான் சென்றிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவான பில்லா, வீரம், துணிவு போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இவரின் உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இவரின் மரணம் விடாமுயற்சி படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top