Categories: latest newstelevision

ஒருவழியா கல்யாணத்துக்கு பிளான் பண்ணிட்டாங்க போலயே!… பாக்கியாக்கு இருக்க பிரச்னைல இதுவும் ஒன்னா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ராஜீயை காப்பாற்றி தன் ரூமுக்கு அழைத்து வந்து இருக்கிறார் பாக்கியா. எதுக்கு அக்கா நமக்கு இந்த வேலை என்கிறார் செல்வி. என்ன செய்ய சொல்ற பொம்பள பிள்ளைடி. அவளை குடும்பத்துடன் சேர்க்க வேண்டும் என்கிறார்.

பின்னர் ராஜீயிடம் குடும்ப விவரத்தினை கேட்க ஏற்கனவே அவங்களை அசிங்கப்படுத்திட்டேன். அங்க போய் மீண்டும் அசிங்கப்படுத்த மாட்டேன் என மறுத்து விடுகிறார். பின்னர் ராஜீயை அவங்க ரூமிலையே தங்க வைக்க பாக்கியா தூங்கிவிட்டார் என்று வெளியில் செல்ல நினைத்த ராஜீயை எழுந்து தடுத்து விடுகிறார் பாக்கியா.

இதையும் படிங்க: இனிமே பேச்சே இல்லை!.. ஒன்லி வீச்சு தான்!.. கோட் மியூசிக் பத்தி மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!..

பின்னர் கோமதி குடும்பம் குன்னக்குடிக்கு கிளம்புகின்றனர். மீனாவை எல்லாத்தையும் பார்த்து எடுத்து வைத்துக்கோ எனச் சொல்லி விடுகிறார் கோமதி. மினிஸ்டரை பார்க்க வரும் பாக்கியாவை, அமைச்சர் சாப்பாடெல்லாம் அருமையா இருந்ததாக சொல்லி பாராட்டுகிறார்.

எல்லாத்தையும் பேக் செய்து கொண்டு கோமதி குடும்பத்தினர் எழில், அமிர்தா, செல்வியிடம் சொல்லி விட்டு செல்ல வருகின்றனர். அப்போ உள்ளே ராஜீயின் காலை பார்க்கும் மீனா யார் என்கிறார். செல்வி பெரிய கதை எனச் சொல்ல வர கதிர் தடுத்து பஸ் நேரம் ஆகிவிடும் எனக் கூட்டி செல்கிறார். வெளியில் பாக்கியாவை பார்க்கும் கோமதி பேசிக்கொண்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: இமான் மனைவிய இப்படித்தான் டார்ச்சர் பண்ணுவேன்!.. எஸ்.கே. பேசிய வீடியோவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!.

அப்போ கதிர் நண்பர்கள் கால் செய்து ராஜீ படத்தினை கேட்க அவர் என்னிடம் இல்லையே எனச் சொல்ல மீனா சோசியல் மீடியாவில் இருந்து எடுத்து தருகிறார். அதை வாங்கி பார்க்கும் கோமதி புலம்பிவிட்டு பாக்கியாவிடம் அந்த படத்தினை காட்டுகிறார். உடனே அதிர்ச்சி ஆகும் பாக்கியா அவர்களை ஊருக்கு போவதை தடுத்து மீண்டும் ரூமுக்கு அழைத்து வருகின்றார். வந்து எழிலிடம் அந்த படத்தினை காட்ட அவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.

அப்புறம் ராஜீயை பார்த்தது அவர் ஏமாந்த விஷயத்தினை கூற எல்லாரும் ஷாக் ஆகின்றனர். கோமதி, ராஜீயை பார்க்க பாக்கியா ரூமுக்கு வர அமிர்தா மற்றும் செல்வி கோயிலுக்கு அழைத்து போய் இருப்பதாக சொல்கிறார் எழில். எல்லாரும் கோயிலுக்கு செல்கின்றனர். ராஜீயை பார்த்து அனைவரும் அதிர்ந்து நிற்க கோமதியை கட்டிக்கொண்டு அழுகிறார்.  மீனா எல்லாருக்கும் அவன் தப்பானவன் தெரியும் போது, நீ எப்படி அவனை நம்பி வந்த எனத் திட்டுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மீண்டும் மொக்கை வாங்க காத்திருக்கும் மனோஜ்!… முத்து செய்த விஷயத்தால் அதிர்ச்சியான விஜயா

Akhilan

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

3 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

3 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

9 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

11 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

11 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 hours ago