Connect with us

latest news

ஒருவழியா கல்யாணத்த முடிச்சி விட்டாங்கப்பா.. பாக்கியாவுக்கு தான் இதிலும் சோதனையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கதிரும், ராஜீயும் அப்பாக்கள் சொன்னத்தை நினைத்து வருந்துகின்றனர். அடுத்து ராஜீ கழுத்தில் கதிர் தாலி கட்டுகிறார். பின்னர் அங்கிருந்த கோமதி மற்றும் பாக்கியா காலில் விழுந்து அசீர்வாதம் வாங்கி கொள்கின்றனர்.

பின்னர் பாக்கியாவிடம் நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. ஆனா இதுக்கப்பறம் செய்ய போற உதவி தான் ரொம்ப பெரிசு என்கிறார். பின்னர் கதிரிடம் வந்து நான் தான் உனக்கு கல்யாணம் செஞ்சி வச்சேனு தெரிஞ்சா அப்பா துடிச்சி போயிடுவாரு. அதனால் உனக்கு முன்னாடி போய் நடிக்க போறேன்.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..

அது உனக்கு செய்ற துரோகம் தான் என்னை மன்னிச்சிடு என்கிறார். ராஜீயிடம் வந்து எல்லா நல்லதா நடக்கும். தைரியமா இரு எனச் சொல்லி செல்கிறார். கோமதி கிளம்பி குன்னக்குடிக்கு செல்கிறார். பாதியில் வண்டியை நிறுத்தி இனி என்ன நடக்குமோ என மீனாவிடம் புலம்புகிறார்.

இதுவரைக்கு உங்களுக்கு துணையா இருந்த மாதிரி இனிமேலும் இருப்பேன் என மீனா கூறிவிட இருவரும் ஊருக்கு வருகின்றனர். செல்வி, அமிர்தாவை ஊருக்கு அனுப்பிவிட்டு பாக்கியா, கதிர் மற்றும் ராஜீயை அழைத்துக் கொண்டு குன்னக்குடிக்கு வருகிறார். பாண்டியன் கதிர் குறித்து கேட்க கோமதி முகத்தினை சோகமாக வைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்.

இதையும் படிங்க: வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

கோமதி அம்மா ராஜீயும் அவள் அத்தையை போல ஓடிப்போயிட்டாலே எனச் சொல்லி புலம்பி கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top