Connect with us

latest news

என்னங்க கோபி மறுபடியும் பழைய பொண்டாட்டிய பார்த்து ஃபீல் பண்ணுறீங்க!.. தர்ம அடி விழப்போது!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி சோர்ந்து நிற்க செந்தில் நீ நிறைய உழைச்சிட்ட போய் ரெஸ்ட் எடு அப்புறம் என்னனு பார்க்கலாம் என்கிறார். தொடர்ந்து ஆபிஸின் பழைய நினைவுகளை நினைச்சிக்கிட்டே வெளியேறிவிடுகிறார் கோபி. வீட்டுக்கு வந்து ஹாலில் உட்கார்ந்து இருக்கிறார்.

அப்போ அங்கு வரும் ராதிகா என்ன கோபி இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்க. ரொம்ப வேலையோ அசதியா இருக்கீங்க என்கிறார். இருங்க உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என கிட்சனுக்குள் செல்கிறார். எப்பையுமே கேட்க மாட்டா இன்னைக்கு வேலை பத்திலாம் கேட்குற எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..

பின்னர் தன்னுடைய காபியை கொடுத்த ராதிகா நண்பி கணவருக்கும் வேலை கிடைக்குமா எனக் கேட்க பதிலே சொல்லாமல் அதிர்ச்சி ஆகிவிடுகிறார் கோபி. என்ன ஆச்சி என ராதிகா கேட்க காபி சுட்டிருச்சி எனக் கூறிவிடுகிறார். அந்த நேரத்தில் பாக்கியா, ராமமூர்த்தி, எழில் ரெஸ்டாரெண்ட்டில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஓனரிடம் அட்வான்ஸை கொடுத்து விட்டு பத்திரத்தை வாங்கி கொள்கின்றனர். வீட்டுக்கு வந்து இந்த விஷயத்தை எல்லாரையுமே கூட்டி சொல்கிறார் பாக்கியா.

இதனால் இனியா நீ தான்மா இன்ஸ்பிரேஷன். செழியன் ரொம்ப சந்தோஷம் என அவரை பாராட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதை பார்த்து கொண்டு இருந்த கோபிக்கு கவலையாகி விடுகிறது. ஈஸ்வரி எதுவுமே சொல்லாமல் இருக்க பாக்கியா என்ன ஆச்சு அத்தை என்கிறார். உன்னால முடியுமா எனக் கேட்க நானும் சொன்னேன் அத்தை. மாமாவும், எழிலும் தான் எனக் கூற எழிலும் நாங்க தான் சொன்னோம் என்கிறார்.

இதையும் படிங்க: அந்த நடிகர் என் காலை பிடிப்பதா?!.. கலங்கிய விஜயகாந்த்!.. படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

ராமமூர்த்தி அவளுக்கு எல்லாம் தெரியும். ஒன்னுமே தெரியாம ஆரம்பிச்சு. இன்னைக்கு அவளை பாத்து பிசினஸ் கத்துக்கலாம் எனப் பெருமையாக சொல்கிறார். ஜெனிக்கு சாரி சொல்லி பொக்கே அனுப்புகிறார் செழியன். ஆனால் அதை பார்த்த ஜோசப் மற்றும் மரியம் கடுப்பாகி அதை குப்பையில் போட்டு விடுகின்றனர். ஜெனிக்கு தெரியக்கூடாது எனவும் கூறிவிடுகிறார்.

பாரில் உட்கார்ந்து இருக்கும் கோபி குடித்துக்கொண்டே இருக்கிறார். செந்தில் ஏண்டா இப்படி குடிக்கிற எனக் கேட்க நான் இறங்கிட்டே போறேன். ஆனா பாக்கியா வளர்ந்துக்கிட்டே போறா பொறாமையா இருக்கு எனச் சொல்லி குடித்துக்கொண்டே இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: உருட்டு பலமா இருக்கே மனோஜு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அடி விழும்.. சிறகடிக்க ஆசையில் செம ட்விஸ்ட்டு!

google news
Continue Reading

More in latest news

To Top